என் தோழர்கள்

Monday 23 April 2012

வறுவல் மற்றும் நொறுவல் - 24/04/2012

என் தம்பி இந்த பன்னிரென்டாவது தேர்வு எழுதி இருக்கான். அவனை காலேஜ் சேக்கற விஷயமா நா அலஞ்சிகிட்டு இருக்கேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை நந்தப்பாக்கத்துல நடந்த கல்வி திருவிழாக்கு நானும் அம்மாவும் போய் இருந்தோம். அப்பதான் விநாயகா மிஷன் யுனிவர்சிட்டி பத்தி அங்க கேள்விப்பட்டோம். Biotechnology துறையை பத்தி விசாரிச்சோம். அந்த துறை எல்லா காலேஜ்லயும் இல்லை என்பது ஒரு வருத்தமே. அதன் பிறகு ஓர் நாள், அந்த கேம்பஸ் பத்தி விசாரிக்கபோணோம். அங்க எனக்கு ஏற்ப்பட்ட சில அனுபவம் இதோ. அம்மாக்கூட போனதுனாலயோ என்னவோ, ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல மாரியாதையோடு எல்லாருமே பேசினார்கள். அங்க வேலை செய்யும் பியுன் அவர்கள், எங்களை இருக்கையில் அமர செய்துவிட்டு காபி குடிக்கிறீங்களா, இல்லை கூல்டிரீங்க்ஸ் குடிக்கரீங்களா என கேட்டு என் புருவத்தை உயர செய்தார். அதே உபசரிப்பு அங்கு 15வருடமாக வேலை செய்யும் ஆயா ஒருவரிடம் இருந்தும் வந்தது. உள்ளே அட்மிஷன் போடற இடத்துல, நாங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தக்க பதில் அளித்தார். மற்ற காலேஜ் விட இங்கு ஃபீஸ் கொஞ்சம் குறைவு தான். அங்கு இருந்த அட்மிஷன் ஆபிஸ்ர் அவர்கள், எங்களுக்கு காலேஜ் கேண்டீனில் உணவு ஏற்பாடு செய்தார்கள். சாப்பிட்ட கையோடுஓரு அப்பிளிகேசன் வாங்கி கொண்டு வந்தோம். மேலும், அங்கு பணிபுரியும் துறை தலைவருடன் என்னை பேச வைத்ததும், லேப் மற்றும் கேம்பஸை கூடவே ஒரு ஆள் வந்து சுற்றிகாட்டியதும் சொல்லியே ஆகவேண்டும். இந்த செயல் முறை அங்கு வரும் அனைத்து பெற்றோருக்கும் பொருந்தும். பணத்தை மட்டும் குறி வைக்கும் பல கல்லூரி மத்தியில் மனித உணர்வுக்கு பதில் அளிக்கும் இந்த பல்கலைகழகம் என்னால் மறக்கவே முடியாது.. மேலும் அக்கல்லூரி விவரம் அறிய http://www.vinayakamission.com/ 
-------------------------------------------------------------------------------------------------------
எல்லாத்தையும் வித்தியாசமா பாக்கற மனிதர்கள் இருக்காங்க. எதுக்குமே உதவாம இருக்கற குப்பைகூட சில சமயம் உதவும். இப்ப விடுமுறை மாதம் அப்படிங்கறதால நிறைய நேரம் இன்டர்நெட்ல கழிக்க முடியுது.. ஃபேஸ்புக் பரண், இந்த பேஜ் பத்தி எல்லாருக்குமே தெரியும். இதுல நா பாத்த ஒரு சின்ன பதிவு இங்கே.. முடிந்தால் படித்தும் பார்க்கலாம்.. ஃபேஸ்புக் பரண்
---------------------------------------------------------------------------------------------------
ஆளாளுக்கு தத்துவம் சொல்றாங்க நானும் ஒரு தத்துவம் சொல்லட்டுமா...
   *அடுத்தவனின் வளர்ச்சியை மட்டும் பாக்காதே, அதன் பின்னால் உள்ள அவன் உழைப்பையும் பார்*


எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சார். பிரபல பதிவர் ஆகனும்னு அடுத்தவங்கள பாத்து ஆசைப்பட்ட போதாது, அதுக்கு கொஞ்சமாச்சும் உழைக்கனும்.. என்னைக்குமே நம்பிக்கையையும் தன்னம்பிக்கையும் விடவேமாட்டான் இந்த சதீஷ்...
-------------------------------------------------------------------------------------------------------
போனபதிவுல எனக்கு வேலை கிடச்சதுக்கு ஒரு காரணமா, இந்த பிளாக் பத்தி சொல்லி இருந்தேன். இந்த பிளாக் மூலமா எனக்கு வேளை மட்டும் கிடைக்கல, இன்னும் ஒரு நன்மையும் நடந்துச்சு... எனக்கு தெரிஞ்சவரோட நண்பருக்கு பிளாக் எழுதறது எப்படினு சொல்லி தர சொன்னரு. நானும் ஆவலோட போய் சொல்லி கொடுத்தேன். அவர் ஆர்வத்தோடையும் விருவிருப்போடயும் நல்லா கத்துகிட்டாரு. மூனு மணிநேரம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவரிடம் இருந்து விடைபெற்றேன். என் போக்குவரத்து செலவுக்காக எனக்கு பணம் அளித்தார், நான் எவ்வளளோ சொல்லியும் கேட்காமல், அதை என் சட்டைபாக்கெட்டில் வைத்து அனுப்பினார். அங்கு இருந்து கிளம்பியதுக்கு பிறகு என் சட்டையை பார்த்தால், ஒரு 500ரூபாய் நோட்டு என்னைபார்த்து பல் இழித்தது. உடனே அவருக்கு போன் செய்து ஏன் இவ்வளவு பணம் கொடுத்தீர் என்று கேட்டேன். அவர் அமைதியாக சொன்னார் இது குருதட்சணை என்று. எனக்கு அந்த நோட்டை மாற்ற மனமில்லாமல் அது என்னிடமே இருக்கிறது..
--------------------------------------------------------------------------------------------------------
காலேஜ் முடிஞ்சதால எங்க காலேஜ் பொண்ணுங்க வரிசையா படை எடுக்க ஆரம்பிச்சுடாங்க ஃபேஸ்புக்குக்கு. இது நல்ல விஷயம் தான். ஆனா, ஆர்வகோளாறுல எல்லாரும் அவங்க போட்டோஸ் போட்டு நல்லா போசு கொடுக்குதுங்க.. அந்த தளத்துல பொண்ணுங்க போட்டோ போட்டு படற அவஸ்த்த இருக்கே அதலாம் சொல்ல முடியாது. சொந்த போட்டோ போடவேணாம் னு நா எனக்கு தெரிஞ்ச பொண்ணுக்கு பர்சனல் மெசேஜ் அனுப்பி மொக்க வாங்கனது தான் மிச்சம்.
பட்டாத்தாம் தெரியும் இவங்களுக்கு. நா என்னனு சொல்றது. இங்க என்னை கவனிக்கவே ஆள் இல்லயாம் நா போய்ட்டேன் அவளுங்க பஞ்சாயத்துக்கு.
-----------------------------------------------------------------------------------------------------
இதுக்கு பேர் தான் பெல்லி டான்ஸ்
நாங்களும் ஆடுவோம்ல. வேணும் நா வந்து பாருங்க டாஸ்மாகல... எல்லாரும் ஃபுல் போதைல இப்படி தான்யா ஆடறாங்க. ஒரு வேளை, இந்த கலை நம்மஊர்ல இருந்து தான் போய் இருக்குமோ....
----------------------------------------------------------------------------------------------------------
எல்லாக்காலத்துக்கும் ஏற்ற ஒரு நகைச்சுவை நடிகர். ஆல் டைம் ஃபேவரேட் காமெடியன் அவர்களுடைய விடியோ கிளிப் இது. மறைந்த நடிகர் நாகேஷ் அவர்களும் சோ அவர்களும் இணைந்து கலக்கிய காமெடி...
 
------------------------------------------------------------------------------------------------------------
18+ போடற அளவுக்கு நா இன்னும் வளரலனு சொல்ல முடியாது. நானும் போடுவேன்...


அடுத்த பதிவுல போடறேன்....
--------------------------------------------------------------------------------------------------------
வறுவல் மற்றும் நொறுவல் அப்படிங்கற தலைப்பு இந்த தளத்துக்கு சூட் ஆகலை அப்படினு ஒரு நெருங்கிய நண்பர் சொன்னதால, அடுத்த வாரம் ஒரு புது பெயர் வைக்கப்பட உள்ளது. மேலும் பல புத்தம் புது பொலிவுடன் மீண்டும் வருகிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------


என்றும் அன்புடன்
சதீஷ்.........


No comments: