என் தோழர்கள்

Showing posts with label ஜாக்கிசேகர். Show all posts
Showing posts with label ஜாக்கிசேகர். Show all posts

Tuesday, 6 September 2011

நானும் ஜாக்கியும்

பதிவர் சந்திப்பு நடந்துச்சுனு சொன்னான், ஜாக்கிசேகர் வந்தார்னு சொன்னான்.. அவ்ளோ தானா? அப்ப தலைவரு தலைவருனு சொல்லி பதிவு போட்டது எல்லாம் ஒரு விளம்பரம் தானா???

இப்படிலாம் உங்க மனசுல அசிலி பிசிலியா எதாச்சும் இருந்தா அதை அப்சரா ரப்பர் போட்டு அழிச்சுருங்க.... அவர் எப்ப வருவார்னு வாசக்காலயே பாத்துக்கிட்டு இருந்தேன்.... இந்த பதிவை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு "சென்னை பதிவர் சந்திப்பு" அந்த பதிவ படிச்சிட்டு வாங்க அப்ப தான் புரியும்..


என்னோட அறிமுக பேச்சு முடிஞ்சுருச்சு... அது வரைக்கும் கூட நா ஜாக்கிசேகர் கிட்ட போய் அறிமுக பண்ணிகல... மீண்டும் வந்து என் இடத்துலயே உக்காந்துட்டேன்... பிரபா அவர்கள் ஜாக்கிசேகருக்கு ஒரு சீட்டு போட சொன்னாருனு நா அங்கு பேசும் போது சொன்னேன்...


ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் அருகில் ஒரு குரல் கேட்டது... "என்னடா சீட்டு போட்டு வச்சிருக்கியா?" அது ஜாக்கி சார் வாய்ஸ்.... எனக்கும் ஒன்னும் புரியாம "ம்ம்ம், ஆமா சார் உங்களுக்கு தான் இந்த சீட்டு" என சொன்னேன்.... அதற்க்கு ஏற்றார் போல் என் அருகில் ஒரு சீட்டு மட்டும் காலியாக இருந்தது.....


சரி அப்புறம் என்ன ஆச்சு.... நா என்ன கதையா சொல்றேன்...


இரண்டு முறை என் போன் சினுங்கியது... "போனை, சைலெண்டில் போடு" என ஒரு சிறிய அதட்டல்...  சட்டென்று என் போன் அமைதியானது.... ஹி ஹி ஹி நைஸ் ஜாக்கி..... வேறு எதுவும் அவருடன் பேசவில்லை... நான் அமைதியாய் தான் இருந்தேன்....


சற்று நேரம் கழித்து, சந்திப்புக்கு வந்து இருந்த அனைவருக்கும் டீ சப்ளை செய்யப்பட்டது.... நான் ஒரு கப் டீயை எடுத்து அதை அவருக்கு கொடுத்தேன்... 


பிறகு பல சூடான விவாதங்கள் நடைப்பெற்றன.. அதில் அவரும் பங்கேற்றார்.... "புதிய பதிவர்கள் தங்களுடைய பதிவுகளை சந்தைபடுத்துவது ரொம்ப முக்கியம்.. அப்ப தான் அது பல முகவரை சென்று அடையும்... பல திரட்டிகளில் பதிவு செய்வது நலமே... முடிந்த வரை லேபிள் உபயோகிக்கவும் " இந்த மாதிரி நிறைய சொன்னாரு...


புதிய பதிவர்கள் தொடர்ந்து எழுதனும், பின்னூட்டம் இல்லை எனவும் வருகையர் யாரும் இல்லை எனவும் கவலைபடதீங்க.... என கூறி ஆறுதல் அளித்தார்...

கூட்டம் நிறைவாய் முடிய, என் கண்கள் மட்டும் ஜாக்கி சாரை தேடியது... அவரை சந்தித்து பேச வேண்டும் என ஆவல்.... அவரை பார்த்து சிரித்தவாறே அருகில் சென்றேன்... பல கேள்விகளை கேட்டேன், சற்றும் சளைக்காமல் பதில் தந்தார்... மிகுந்த மரியாதையுடன் பேசினார்... என்னை ஊக்கபடுத்தியது அவரது வார்த்தைகள்.... ஒரு பத்து நிமிடம் அவருடன் தனியாய் பேசியதில் மகிழ்ச்சி....



இது தாங்க "பைனல் கிளிக்"..... கேபிள்சங்கர், நான், ஜாக்கிசேகர்.... இவ்ளோ சீக்கரத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது..... இந்த போட்டோ எத்தனை பேரின் வயித்து எரிச்சலாக மாறபோகிறது என தெரியவில்லை.....

என் கையில இருக்கற அந்த புத்தகம் தான் சிவகுமார் அண்ணன் தந்தது.... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்........

மீண்டும் அடுத்த சந்திப்பில் பாக்கலாம்......





சதீஷ்..........


Wednesday, 17 August 2011

ஜாக்கிசேகர் அவர்களுக்கு

நானும் எல்லாம் தெரிஞ்ச மாறி பிளாக் ஒபன் பண்ணீ அதுக்கு அழகாக பேர் கூட வச்சேன்... ஆனா என்ன பிரச்சனனா என்னத எழுதுதரதுனு தன் இன்னைக்கு வர தெரியல... ஒரு கவிதை ஒரு செய்தி ஒரு அறிவுரை அப்படி இப்படினு தடபுடலா யோசிச்சு அத பதிவும் பண்ணி செம மொக்க தான் ஆச்சு... அத பாத்தலே வாந்தி வருது..டெய்லி பேப்பர்ல வரத போடலாமா.. சுத்த வேஸ்ட், அசிங்கமா திட்டுவாங்க.. ஜோக் ஜோசியம் லொட்டு லொசுக்கு, சீ சீ ரொம்ப கேவலமா இருக்கும்....


என்னடா இத்தன நாள் பயபுள்ள சும்மா இருந்துட்டு இன்னைக்கு ஓவரா பொங்குறானே தோனுதா, தோ சொல்றேன் இருங்க...
என் தல ஜக்கிசேகர் பிளாக் பாத்தேன்... ஒன்னு ஒன்னும் நின்னு விளயாடுது.. நா என் கடைய சாத்திடலாமானு கூட தோனுது... 3 வருஷம் முன்னால அவர் எழுத ஆரம்பிச்ச கூட சூப்பரா தான் எழுதி இருக்கரு... அவர் பிளாகுக்கு புதுசுனு சுத்தமா தெரியது.... அவரோட எழுத்துல மயங்கி நேத்து ஒரு கமெண்ட் போட்டேன்.. அத அப்ரூவல் கூட பண்ணிடாரு... (சதாப்த்திரி எக்ஸ்பிரஸ்-ரெயில் பயணம்)... என் பிளாகின் முதல் கமெண்டும் அவருடையது தான்... அந்த சந்தோஷம் தான்.. ஒரு கேஸ், கேஃப் புல்லா அடிச்ச சந்தோஷம் எனக்கு...


இனிமே என் பிளாக்கில் மொக்கைகள் தவிர்க்கபடும்.. நா ஈ ஓட்டினாலும் பரவல.... இன்னொரு மேட்டர் நா பிளாக் ஆரம்பிச்ச போது என் போட்டோ போடவே இல்ல, இப்ப போட்டோ போட்டு இருக்கறதுக்கும் அன்னேன் தான் காரணம்.....


குறிப்பு::
இந்த பதிவு என் தல அண்ண ஜக்கிசேகர் அவர்களின் மீது உள்ள அன்பால் போடபடுவது மட்டுமே.. என் சுயலாபத்திற்கோ விளம்பரத்திற்கோ அல்ல... விஷமிகள் தெரிந்து கொள்ளவும்...


இந்த பதிவு அவருக்கு சமர்பணம்....
அவரின் ஆசியுடன் என் பதிவு தொடரும்....




சதீஷ்.....