என் தோழர்கள்

Monday 5 September 2011

சென்னை பதிவர் சந்திப்பு - 04/09/2011

ஆரம்பத்துல இருந்து வரேன்.. சென்னையில ஒரு பதிவர் சந்திப்பு நடத்தனும் அப்படினு பிரபல பதிவரான கே.ஆர்.பி.செந்தில், சிவகுமார், பிரபா மற்றும் பலர் முடிவு பண்ணி அத வெற்றிகரமா செய்தும் முடிச்சுடாங்க.....


செப்டம்பர் 4,2011 அன்று கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸின் மேல்தளத்தில் நடைப்பெருகிறது, புதிய மற்றும் அறிமுகமில்லாத பல பதிவர்களை அறிமுகபடுத்தும் விழா தான் அது... என்னையும் தனிப்பட்ட முறையில் சிவகுமார் சார் அழைத்து இருந்தார்... சாரி சாரி அவரை சார் என் அழைக்க கூடாதுனு அவர் அன்பு கட்டளை போட்டு இருக்கார்.. அதனால சிவகுமார் அண்ணே என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து இருந்தார்... அப்பாடா இன்ரோடக்‌ஷன் முடிஞ்சுபோச்சு....


இனிமே என் பார்வையில் இருந்து பதிவர் சந்திப்பு நடைபெற்ற விதத்தை எழுதுகிறேன்......


1. மங்காத்தா படம் பாத்துட்டு நேராக பதிவர் சந்திப்புக்கு போனேன்.. கே.கே.நகர் போனதும் அங்க இருந்து பாண்டிச்சேரி (புதுச்சேரி) கெஸ்ட் அவுஸ்க்கு ஒரு இளநீர் கடைகாரர் வழிசொன்னார்...

2. அங்க போனதும், பதிவர் சந்திப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேசும்படி ஒரு தொலைபேசி இருந்தது.. அந்த எண்ணை தொடர்புக் கொண்டு மீதி முகவரியை வாங்கி கொண்டு, அந்த இடத்தை அடைந்தேன்...

3. என்னை கீழே இறங்கி வந்து அழைத்து சென்றார் சிவகுமார் அண்ணே, பிறகு தான் தெரிந்தது அது அவருடய தொலைபேசி எண் தான் என்பது.. இன்முகத்துடன் வரவேற்றார்.. 


சிவகுமார் : உங்க பேரு?
நான் : சதீஷ் சார்..
சிவகுமார் : அட நீங்க சதீஷ்மாஸ் ஆ?!?!
நான் : ஆமா சார், நீங்க?
சிவகுமார் : மெட்ராஸ் பவன் சிவகுமார்.. உங்களுடைய தெருகூத்து கலைஞர்கள் பற்றிய போஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு.. கீப்ட் அப்...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்..

4. என்னை உள்ளே அழைத்து சென்று, ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அறிமுகம் செய்து வைத்தார்... அவர்கள் அனைவரும் என்னை வாழ்த்தினர்.. பிரபா, கவிதைவீதி சௌந்தர், சென்னை பித்தன், மாறன் மற்றும் பலரிடம்...  நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்...


5. எனக்குனு ஒரு சீட் போட்டு நா உக்காந்துடேன்... அப்போது இன்னும் இரு பதிவர் தங்களை அறிமுக படுத்தி என்னை பற்றியும் கேட்டார்கள்.. அதில் மணிவண்ணன் அவர்களும், பதிவர் தென்றல் உரிமையாளரும் ஒருவர்...


6. பதிவர் தென்றல் என்பது ஒரு பத்திரிக்கை.. பதிவர்கள் எழுதும் சில கட்டுரைகளை அவர்களின் அனுமதியோடு பிரசுரம் செய்யப்படுகிறது... அந்த பத்திரிக்கையின் ஒரு காப்பி எனக்கும் தந்தார்...


7.அமைதியாய் அமர்ந்து இருந்தேன்.. அப்போது கே.ஆர்.பி.செந்தில் அவர்களை அழைத்து வந்து என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் சிவகுமார்..


கே.ஆர்.பி : வணக்கம், சதீஷ் ஆ?
நான் : ம்ம்ம் ஆமா சார்..
கே.ஆர்.பி : ஜாக்கியோடு ரசிகர் தான?
நான் : (எனக்கு ஆச்சரியம்) சார் உங்களுக்கு எப்படி தெரியும்?
கே.ஆர்.பி : உங்க பிளாக் படிச்சு இருக்கேன்.. நல்லா எழுதறீங்க...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்...
கே.ஆர்.பி : உங்க தலைவரும் இங்க வராரு...
நான் : (மனதிற்குள் பயங்கர சந்தோஷத்தில்) ஒகே ஒகே சார்..


பிரபா : ஜாக்கி சார் அவருக்கு உன் பக்கதுல ஒரு சீட்டு போட்டு வை..
நான் : கண்டிப்பா....


8. சிவகுமார் அவர்கள் தாங்கள் கொன்டுவந்த பிளக்ஸ் பேனரை ஒட்டினார்.. அதில் "வா நண்பா" , "சென்னை பதிவர் சங்கம்" என அழகாய் எழுதப்பட்டு இருந்தது.. மேலும் மற்றொரு பேனரில் கவுண்டமணி படம் போட்டு அழகாய் வரவேற்று இருந்தார்...


9. சென்னையை சேர்ந்த பதிவரான கேபிள்சங்கர் வந்தார்.. அதன்பிறகு பல கலகலப்பான விஷயம்லம் நடந்தது... அனைவரும் அவரை சூழ்ந்து நிற்க அந்த இடமே சிரிப்பின் பிறப்பிடமாய் மாறியது... கேபிள்சங்கர் எகிறி எகிறி குதித்து "நானும் யூத் நானும் யூத்" கூப்பாடு போட்டார்...


10. பல பிரபலமான பதிவர்கள் வருகை புரிந்தனர்... யுவகிருஷ்ணா, நரேன், சுரேகா மற்றும் பலர்... (அட என்னடா, யார் யார் வந்தங்கனு முழுசா சொல்லேன்...  -  நா முதல்முறையாக அங்கு சென்றால் எனக்கு அவர்களின் பெயர் மனதில் பதியவில்லை)


11.பின்பு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, ஒவ்வொருவராய் எழுந்த சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.. பெரும்பாலும் அவர்களுடைய அறிமுகத்தை யாரும் கவனிக்கவில்லை.... ஆனால், ஒவ்வொருவரையும் நம்ம கேபிள்ஜீ நக்கல் விட்டு கமெண்ட் அடிச்சது சூப்பர் அப்பு (நோ ஆப்பு)...


12.ஒரு பத்து பேர் பேசி முடிச்சசிருப்பாங்க.. அப்ப திடீர்னு ஒரு பரபரப்பு, ஆரவரம், கலவரம், Hero Entering... Ya u r right... My thala JackieSekar coming... அவர் பின்னால ஒரு கூட்டம்... (தலைவர்னா அப்படி தாங்க இருப்பாங்க).... நா எதோ அவரையே பாத்தேன்... எனக்கு பின்னால இருக்கற சீட்டுல இருந்து ஒரு நாலு சீட்டு தள்ளி உக்காந்து இருந்தார்... சில பேர் எழுந்து போய் அவர்கிட்ட அறிமுகம் பண்ணிகிட்டாங்க... எனக்கு போக பிடிக்கல...


13.என்னை அறிமுகம் படுத்திக்கொள்ள அழைத்தார்கள்.. நான் முன்னே சென்று பேசினேன்... பத்து பேர் முன்னாடி பேசினா எனக்கு கை,கால்லம் உதரும்... ஆனா அங்க எப்படி பஅவ்ளோ தைரியமா பேசினேன் எனக்கு தெரியல... என்னை பொறுத்த வரை நான் நன்றாகவே பேசினேன்...  கொஞ்சம் அதிக நேரம் எடுத்து கொண்டேன்.. அனைவரின் மனதிலும் அழகாய் பதிந்தேன்.. அங்கு என் எழுத்தை ரசிக்காதவர்கள் கூட என் பேச்சை ரசித்தனர்...


14. இப்ப சீரியஸ் ஆன விஷயத்துக்கு வரலாம்... பல முன்னணி பதிவர்கள் தங்களுடைய கருத்துகளை முன் வைத்து பேசினார்கள்... பல விவதங்கள் முன் வைக்கப்பட்டன... யுவகிருஷ்னா அவர்கள் பல நல்ல தகவல்களை புதிய பதிவர்களுக்கு (அத கொஞ்சம் சொல்லவும் - முடியாது, சந்திப்புக்கு வாரதவங்களுக்கு அதான் தண்டனை)... கூகுள் பஸ் வந்ததில் இருந்து பதிவர்கள் குறைந்து விட்டதாக தெரிவித்தார்.. நல்ல விவாதங்கள் தற்போது இல்லை எனவும் சொன்னார்... உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளியிடவும் என அறிவுருத்தினார்...


15.அவரை தொடர்ந்து "உருப்படாத" நரேன் (நா சொல்லல அவரே தான் சொன்னாரு) பேசினார்.... பற்பல விவாதங்களை முன் வைத்தார்... ராஜீவ், ஈழ தமிழர், அன்னா ஹசாரே.. போன்ற பல முக்கிய விவாதம் நடைப்பெற்றது...


16. சிவகுமார் அவர்கள் பேச ஆரம்பித்தார்.. அதை ஒரே வரியில் சொல்ல முடியாது, ஈழ தமிழர்களை பற்றி கவலைப்படுகிறோமே தவிர நம் தமிழர்களை யாரும் கண்டுக்கொள்வது இல்லை.. டாஸ்மாக் கடையில் பள்ளி சிறுவர்கள் நிற்பது மனதிற்கு வெக்கபட வேண்டிய விஷயம்.. இதை அரசாங்கம் எப்போது தான் கண்டுக்கொள்ளும் என நம் அரசாங்கத்தை பற்றி தெரியாமல் பேசிட்டார் சைவகுமார் (சைவகுமார்)...நாம அவர மன்னிச்சடலாம்...


17.அப்புறம் சுரேகா, தாங்கள் ஆரம்பித்த "கேட்டால் கிடைக்கும்"  பற்றி சூடாக பேசினார்... ஆட்டோ மீட்டர் பற்றியும் தன் கருத்தை முன் வைத்தார்... வெகுஜன மக்களின் நிலை குறித்து கடிந்து கொண்டார்...

18.கணிப்பொறியில் தமிழை உபயோகிக்க முடியும் எனவும் அதை அனைவருக்கும் அறிமுகம் படுத்தவும் அனைவரும் முடிவு எடுத்தனர்... அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்..


19. பின் கூட்டம் தொடர்ந்து நடக்க, சிவகுமார் அண்ணன் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்... பதிவர் சந்திப்புக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் நல்ல புத்தகங்களை கொண்டு வந்து புதிய பதிவருக்கு பரிசளிக்கும் படி சொல்லி இருந்தார்கள்.. அதை சரிவர செய்தது சிவகுமார் அண்ணன் ம்ட்டும் தான்.. "ஹென்றி ஃபோர்ட், எழுதியவர் இலந்தை சு.இராமசாமி " அந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.. அதில் அவரின் கையெழுத்தும் அழகாய் போட்டு தந்தார்... அண்ணன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்...


20. கூட்டம் முடிந்து ஒவ்வோருவரய் கலைந்தனர்.... பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த சந்தோஷம் சிவகுமார் முகத்திலும் பிலாசஃபி பிரபா முகத்திலும்.. என்னை இந்த சந்திப்பிற்கு அழைத்து அறிமுகபடுத்தி வைத்த இவர்கள் இருவருக்கும் நன்றிகள் பல....








மீண்டும் சந்திப்போம்.........






சதீஷ்.............


34 comments:

Anonymous said...

சந்திப்பு மிக அருமையாக நடந்துள்ளது என்று வெகுவாக புரிகிறது நண்பரே..

மிஸ் பன்னிட்டோமேன்னு வருத்தமாகவும் இருக்கு! :)

வாழ்த்துக்கள்!

ரஹீம் கஸ்ஸாலி said...

arumaiyaana ezhuthu nadai. Kalakkala irukku.arumaiyaana ezhuthu nadai. Kalakkala irukku.

கவிதை பூக்கள் பாலா said...

உங்க பதிவர் சந்திப்பு அனுபவத்தை எழுதி இருக்கீங்க நண்பா நன்று , நானும் வந்திருந்தேன் .

Philosophy Prabhakaran said...

அண்ணே... இசுபெல்லிங் மிச்டேக்கை குறைங்க ப்ளீஸ்...

Philosophy Prabhakaran said...

// கேபிள்சங்கர் எகிறி எகிறி குதித்து "நானும் யூத் நானும் யூத்" கூப்பாடு போட்டார்... //

இரு ஓய் அவரை அனுப்பி வைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

மொத்தத்துல ஓவர் நைட்டுல ஹீரோவாயிட்டீங்க...

Jackiesekar said...

குட் இப்படித்தான் எழுதனும்னு யாரும் யாருக்கும் சொல்லிக்கொடுக்க முடியாது...இப்ப உனக்கு எழுத இன்ரஸ்ட் வந்துடுச்சி... நல்ல விஷயம்..தொடர்ந்து எழுதவும்...இப்ப இந்தபதிவுல எல்லாத்தையும் கவர் பண்ணி இருக்கற.. நானும் சதிப்பில் பேசினேன் அது மிஸ்சிங்...

ஒரே ஒரு பதிவு எழுதிட்டு என்னை யாரும் கவனிக்கலை என்று சொல்வது ஏற்புடையது அல்ல..இது சினிமா அல்ல.. வெகு ஜனரீச் கம்மிதான்.. அதனால் தினமும் தோன்றியதை எழுது..

ஆறு மாதம் கழித்து நீ அறியபடுவாய்...

முதல் கமேன்ட் போட்டு அடுத்த கமென்ட போட உள் தளத்துக்கு வரும் போது நிறைய எழுதி இருப்பது மகிழ்ச்சியை தருகின்றது..

வாழ்த்துகள்..

பிரியங்களுடன
ஜாக்கிசேகர்.

Cable சங்கர் said...

குட்.. நல்லாருக்கு.. இன்னும்.. இன்னும் கொஞ்சம் எதிர்பார்கிறேன்.:))

Prabu Krishna said...

அருமை. இந்த முறை மிஸ் பண்ணிட்டேன். அடுத்த முறை வந்துடுறேன்.

Anonymous said...

சந்திப்பு பற்றிய நிகழ்வுகளை அழகாக தொகுத்து உள்ளீர்கள் சதீஷ். ஹென்றி போர்ட் புத்தகம் குறித்த தங்கள் விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன். நேரம் கிடைக்கையில் படித்துப்பாருங்கள்.

சதீஷ் மாஸ் said...

நன்றி ஷீ-நீசி, அடுத்த சந்திப்புக்கு நிச்சயம் வாருங்கள்...

சதீஷ் மாஸ் said...

ரஹீம் கஸாலி அவர்களுக்கு நன்றி.. நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதற்கும் நன்றி... உங்கள் அன்பு என்றும் கிடைக்க விரும்புகிறேன்..

சதீஷ் மாஸ் said...

பாலா அவர்களுக்கு : தெரியும் சார், நீங்க தான் என்னையும் ஜாக்கி சார் அப்புறம் கேபிள்ஜீ, எங்க மூவரை மட்டும் தனியாக போட்டோ எடுத்தீர்... அதை எனக்கு அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும் சார்...

சதீஷ் மாஸ் said...

பாலா அவர்களுக்கு : போட்டோ கிடைத்தது... நம்றி சார்...

சதீஷ் மாஸ் said...

பிரபா அவர்களுக்கு : //அண்ணே... இசுபெல்லிங் மிச்டேக்கை குறைங்க ப்ளீஸ்... //

கழுத அதுகிடக்கு விடுங்க....

சதீஷ் மாஸ் said...

பிரபா : // மொத்தத்துல ஓவர் நைட்டுல ஹீரோவாயிட்டீங்க... //

நீங்களும் சிவகுமாரும் தான் காரண்மே.... நன்றி சொல்லி அன்னியமாக்க விரும்பவில்லை

சதீஷ் மாஸ் said...

விக்கியுலகம் அவர்க்ளுக்கு : நன்றி

சதீஷ் மாஸ் said...

ஜாக்கிசேகர் அவர்களுக்கு : ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்... நீங்க கமெண்ட் போடுவீங்கனு கனவுல கூட நினைக்கல.... நன்றி சார்....

// இப்ப இந்தபதிவுல எல்லாத்தையும் கவர் பண்ணி இருக்கற.. நானும் சதிப்பில் பேசினேன் அது மிஸ்சிங்...//

உங்களை எப்படி சார் மிஸ் பண்ண முடியும்... "நானும் ஜாக்கியும்" இந்த தலைப்புல ஒரு முழு பதிவே போடனும்னு இருக்கேன் சார்... நேத்தே போடதது என் தவறு தான்... அந்த பதிவும் உங்களுக்கா இன்றே வெளியிடபடுகிறது...

//முதல் கமேன்ட் போட்டு அடுத்த கமென்ட போட உள் தளத்துக்கு வரும் போது நிறைய எழுதி இருப்பது மகிழ்ச்சியை தருகின்றது..//

எல்லாம் உங்களின் ஆசிர்வாதம் தான் சார்.... ஜாக்கியின் ரசிகன் பதிவுலகில் தோற்றான் என பெயர் வர கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்...

சதீஷ் மாஸ் said...

கேபிள்சங்கர் : ஆச்சரியமாக தான் இருக்கு... உங்களை போன்ற பதிவர்கள் என் தளத்திற்க்கு வந்து கமெண்ட் போடுவதை பார்த்தால்... மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல....

// குட்.. நல்லாருக்கு.. இன்னும்.. இன்னும் கொஞ்சம் எதிர்பார்கிறேன்.:)) //

விரைவில் உங்கள் ஆசிர்வாதத்தில் வெல்வேன்....

சதீஷ் மாஸ் said...

பலே பிரபு : //அருமை. இந்த முறை மிஸ் பண்ணிட்டேன். அடுத்த முறை வந்துடுறேன். //

நிச்சயம் அடுத்த சந்திப்பில் உங்களை எதிர்பாக்கிறேன்...

சதீஷ் மாஸ் said...

சிவகுமார் : //சந்திப்பு பற்றிய நிகழ்வுகளை அழகாக தொகுத்து உள்ளீர்கள் சதீஷ். ஹென்றி போர்ட் புத்தகம் குறித்த தங்கள் விமர்சனத்திற்கு காத்திருக்கிறேன். நேரம் கிடைக்கையில் படித்துப்பாருங்கள். //

நிச்சயமாக அண்ணா... முதல் 85 பக்கம் படித்துவிட்டேன்... அதாவது 6 அத்துயாயம்... மிக அருமையாக விருவிருப்பாக நகர்ந்தது...

கோகுல் said...

ஓவர் நைட் ஒபாமா மாஸ் சதிஷ்!
பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
தொடர்ந்து எழுதுங்கள்.
அப்பறம் ஒரு சின்ன விஷயம்!
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறிங்க!
அதனால வருங்காலத்துக்கான முயற்சிகளிலும் கவனம் செலுத்திக்கொண்டே எழுத்துப்பணியையும்!தொடருங்க!(தப்பா நினைக்க வேண்டாம்!)
எழுத்து நடை அருமை!இயல்பா இருக்கு!

சதீஷ் மாஸ் said...

கோகுல் அவர்களுக்கு : எனக்கும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி....

சதீஷ் மாஸ் said...

கோகுல் :// அப்பறம் ஒரு சின்ன விஷயம்!
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறிங்க!
அதனால வருங்காலத்துக்கான முயற்சிகளிலும் கவனம் செலுத்திக்கொண்டே எழுத்துப்பணியையும்!தொடருங்க!(தப்பா நினைக்க வேண்டாம்!) //

கண்டிப்பாக... இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு... அக்கறை எடுத்துக்க நீங்களாம் இருக்கும் போது...

யுவகிருஷ்ணா said...

சுவாரஸ்யமான தொகுப்பு

கோகுல் said...

சதிஷ்!பதிவுகளை தமிழ் 10,இன்டலி.உலவு போன்ற திரட்டிகளிலும் இணைக்கவும்!

http://www.vandhemadharam.com/2011/01/blog-post_08.html
இது பிரபல தொழில்நுட்ப பதிவர் வந்தேமாதரம் சசி அவர்களுடைய தளம்.பல சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள உதவும்!

சதீஷ் மாஸ் said...

நன்றி நண்பா......

சதீஷ் மாஸ் said...

யுவகிருஷ்ணா அவர்களுக்கு : நன்றி சார்... அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டு போங்க... உங்களின் வரவு முக்கியம்...

Anonymous said...

Super. Don't change your writing style for anyone. continue with the same, and one day you will own a linear one.

suka.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

நல்லா தொகுத்து இருக்கீங்க...படிக்கும்போது நானும் உடன் இருந்தது போல் உணருகிறேன்....

அஞ்சா சிங்கம் said...

நல்ல முன்னேற்றம் தெரியுது ...........
கீப் இட் அப் ..............

N.H. Narasimma Prasad said...

ரொம்ப அருமையாக பதிவர் சந்திப்பை பற்றி எழுதியிருக்கிறீர்கள். அடுத்த முறை நான் சென்னையில் இருந்தால், அப்போது பதிவர் சந்திப்பு நடந்தால், நாம் கண்டிப்பாக சந்திப்போம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கூட்டத்தில் இன்னோருமுறை கலந்துக் கொண்டது போன்ற உணர்வு...

உற்சாகத்துடன் தொடருங்கள்..

Rajkumar said...

Your way of presentation is nice...Keep it up..