என் தோழர்கள்

Tuesday 26 March 2013

கவிதை நேரம்


சிறகடிக்கும் குருவி
    உன்னை கண்டால்
சில்லென்று போய்விடும்
   கிறங்கடிக்கும் அழகுடி - நீ

-----------------------------------------------

காதல் கவிதை எழுதனும்
    அது காதலி இருந்தால் 
எப்படி முடியும் - காதலிப்பவர் சொல்லும் வரிகள்...!

-----------------------------------------------

எவ்வளவு யோசித்தும்
   முடியவில்லை
காதலின் ஆழத்தை பற்றி எழுத,
  யார் மீது பழி போடலாம்....

-----------------------------------------------

எப்போதும் தெரிந்துக் கொள்
  மனிதனுக்கு போதும் என்ற
சொல்லுக்கு அர்த்தம் தெரியாது - போதுமா...

-----------------------------------------------

புதிய நண்பனை தேடும் - நீ
   பழையவனை இழந்தே 
ஆக வேண்டும்.....!

-----------------------------------------------

பம்பரம்விட்ட வயதில் - என்னை
    பட்டாம்பூச்சியாய் சுற்றினாய் - நீ
பருவம் அடைந்தவுடன் - என்னை
   பரதேசி ஆக்கிவிட்டாய்...!

-----------------------------------------------

என்றும் கவிதையுடன்
சதீஷ் மாஸ்



Wednesday 20 March 2013

கவிதை நேரம்



இருட்டுக்குள் இருக்கும் 
    நிலவிற்கு வெளிச்சமாய்
வந்த சூரியனை வேண்டாம் 
                            என்றாள்......

--------------------------------------------------

உன் கைக்குள் இருக்க 
        வேண்டும் என்பதற்கே
மோதிரமாய் பிறந்தேன்.....
     ஆனால் நீ தகுதியை விட
தங்கத்தை பார்த்தாய்....

--------------------------------------------------

உனக்கான உலகத்தில் 
         உனக்கானவனை தேடு.....
பிறருக்காக உன்னவனை இழக்காதே....

--------------------------------------------------

சிற்பத்திற்கும் சிரிப்பு உண்டு...
    தள்ளி நில், இல்லையேல்
நீ ஏமாந்து விடுவாய்.....

--------------------------------------------------

அன்று
      அரக்கனை அமைதிப்படுத்தியவள் - பெண்
இன்று
      அமைதியனவனை அரக்கனாக்குகிறாள்....

--------------------------------------------------

காலம் பதில் சொல்லும் என்பர்
  அவருக்கு தெரியாது
அந்த காலம் எனக்கு இல்லை என்று...

--------------------------------------------------

நகைச்சுவைக்கு நகைப்பு வேண்டும்
  சிந்தனைக்கு ஆற்றல் வேண்டும்
செயலுக்கு தைரியம் வேண்டும்
  மனிதனுக்கு உண்மை வேண்டும் 
உண்மைக்கு உணர்ச்சி வேண்டும்....

--------------------------------------------------

யோசித்து பார் அன்றை
   நேசித்து பார் இன்றை
பிடித்து விடும் நாளையை....

--------------------------------------------------

சிட்டுக்குருவியாய் வாழு
    மயிலாய் வாழ நினைத்து
காட்சிப்பொருளாய் ஆகிவிடாதே...

--------------------------------------------------

முயலுக்கும் ஆமைக்கும் - போட்டி
   உன் முயலாமையை நீக்கு
வெற்றி உன் முதுகில் பயணிக்கும்.....

--------------------------------------------------


என்றும் கவிதையுடன்
சதீஷ் மாஸ்....


Thursday 7 March 2013

கவிதை நேரம்



எண்ணத்தை விதைத்து
விளைச்சலை பார்த்தேன்,
அது பயனற்ற பதராய் போயிற்று..
-------------------------------------------------
எழுத்து மூலம் உலகம்
படைக்க உணர்ச்சி இல்லா
எழுதுகோலை எடுத்தேன்
எதுவுமே புரியாமல்.....!
-------------------------------------------------
அர்த்தமே இல்லாமல்
எழுதிய ஆயிரம்
கவிதையை அர்த்தப்படுத்தியவள்,
அவளுக்காக ஆயிரத்து ஒன்றாய் இது...!
-------------------------------------------------
பெண்ணை காதலிப்பதை
       விட
காலத்தை காதலி
அது உன்னை
செம்மையாக்கும்...!
-------------------------------------------------
அழகை பார்த்து காதல்
செய்யாதே...!
அவள் அழுக்காய் இருக்கலாம்.....!
-------------------------------------------------
பேனா பிடித்தவன் எல்லாம்
கவிஞனும் அல்ல
காதலிப்பவன் எல்லாம்
காதலனும் அல்ல......!
-------------------------------------------------
அறிவாளியாய் பிறந்து
அறிவை இழந்து
துறவியோடு சேர்ந்து
துறவு பூண்டு
வேதனையோடு நிற்கிறேன்
                         அவளால்.......!
-------------------------------------------------
ஆயிரம் ஆயிரமாய்
பணம் இருந்தும்
செய்வது அறியாமல்
தவிக்கிறேன்.....
       -வங்கி காவலாளி....
-------------------------------------------------



என்றும் கவிதையோடு
சதீஷ் மாஸ்.......



Tuesday 10 July 2012

என்னவளே வீடியோ பாடல்

அழகிய வார்த்தைகள் உதிர்த்த என் தோழனின் வீடியோ காட்சிகள்... வருங்கால பாடகன் , வருங்காலத்தை வாழ வைக்க வந்த சிங்கக்குட்டி..... இப்ப பாட போகுது  நல்ல கேளுங்க .... இந்த பாட்டை பாடியவர் விக்ணேஷ்...   


Saturday 9 June 2012

செருப்பு

           பெரிய பருப்பு மாதிரி பேசாதடா... சென்னைவாசிகளின் மிக பெரிய ஆசிர்வாத சொல்.. இச்சொல்லை உச்சரிக்காதவன் சிங்கார சென்னையில் பிறந்த சிங்கக்குட்டி அல்ல, அவனின் பூர்விகமும் சென்னையாய் இருக்காது. வேறு ஊரிலிருந்து குடி பெயர்ந்தவராக இருக்கலாம்... இன்று பிற ஊரை சேர்ந்தவர்களும் இதை கற்றுக் கொண்டு தன்னை ஒரு அழகிய சென்னைவாசியாக மாற்றி கொண்டனர் என்பதே உண்மை..


நா சென்னை மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு வரை படிச்சேன்... அப்ப என் கூட படிக்கர பசங்ககிட்ட போடா எருமை அப்படினு திட்டினா கூடா அது பெரிய மேட்டாரா ஆக்கிடுவாங்க.. அது கூட கெட்ட வார்த்தை லிஸ்ட்'ல தான் இருந்துச்சு..

இப்ப அதே பள்ளியில் படிக்கற பசங்க, எங்க ஏரியால இருக்கறவனுங்க பேசற பேச்ச காது கொடுத்து கேக்க முடியல... தம்மாதுண்டு இருந்துகினு அதுங்க பேசறது இருக்கே.. ஓத்__ அப்படியே உரிச்சு உப்புகன்டம் வச்சிறனும்... அந்த பசங்களுக்குலாம் முழுசா பத்து வயசு கூட இருக்காது.. இந்த இடத்துல நா அந்த பள்ளிகூடத்த குறை சொல்லல.. நானும் அங்கதானே படிச்சேன்.. எப்படி விட்டு கொடுக்க முடியும்... இந்த நாதரிங்க கெட்டு குட்டி சுவரா போகுது..

நா படிச்ச அப்போ, எங்களில் யாரோட நடவடிக்கையாவது மாறிச்சுனா அதை உடனே டீச்சர் பாத்து எங்கள அப்பவே தண்டிப்பாங்க.... ஆனா இப்ப டீச்சர் எல்லாரும் எதயும் கண்டுகறது இல்ல.. ஏன்னா இந்த பரதேசிங்க அப்படி நடந்துகிதுங்க... அவங்க அதனால ஒரு முடிவுக்கு வந்தறாஙக்.. சேத்துல கல்ல அடிச்சா அது நமக்கு தான் சங்கடம்...

அப்ப நீ மட்டும் இப்ப இந்த மாறிலாம் பேசறியேனு கேப்பவர்களுக்கு, இந்த உலகத்துல எவனும் நல்லவன் கிடையாது.. எவனும் கேட்டவன் கிடையாது... உலகத்தை பத்தி புரிஞ்சவனுக்கு எவனும் அறிவுரை பண்ண தேவை இல்லை... ஆனா அந்த அறிவுரைய கேக்கறவனுக்கு என்ன நடக்கும்னு எவனுக்கும் தெரியாது....

ஒரு முறை பதிவர் சந்திப்பு அப்போ, மெட்ராஸ்பவன் சிவகுமார் அவர்கள், சின்ன பசங்க எல்லாம் இப்ப ரொம்ப கெட்டு போச்சு.. சின்ன வயசுலயே அவனுங்க டாஸ்மாக்கு போறானுங்க... அதுக்கு எதாச்சும் வழி பண்ணனும் அப்படினு தன்னோட அதங்கத்த வெளிப்படுத்தனாரு... அதுவும் சரி தான்... அவருக்கு ஏன் அவ்ளோ கோபம் அன்னைக்கு வந்துச்சு அப்படினு எனக்கு தெரியல...

ஆனா நாலு நாளைக்கு முன்னாடி என் பிரண்டோட தம்பி சிகரெட் புடிக்கும் போது என் கண்ணுல மாட்டிகிட்டான்... அந்த ரோட்டில நாலு வச்சேன்.. வாங்கிகிட்டு சைலன்ட் ஆ போய்டான்... அப்பா இல்லதா பையன அவங்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வைக்கறாங்க.. இந்த நாய் என்னான தம் அடிக்குது.... அவங்க அம்மாகிட்ட சொல்லவும் எனக்கு மனசு வரல.. அவங்க அண்ணன் கிட்ட இத பத்தி கேட்டதுக்கு அவன் தண்ணி அடிக்கற அளவுக்கு போய்ட்டான்டா.. இப்ப தான் கொஞ்ச நாள ஓக்கியமா இருக்கான் அப்படினு சொல்றான்.... இதுக்கு மேல நான் என்னத்த சொல்றது...

இந்த இடத்துல நா இப்போ யாரை குறை சொல்றது... அவனோட குடும்பத்தய, அவனோட பள்ளியைய, அவனோட நண்பர்களைய, அவனோட ஏரியாவைய, அவனோட இந்த நிலைமைக்கு யார் காரணம்... தெரியலயே...

பேசமா எல்லாரும் கிளம்பி அமெரிக்கா போய்ரலாமா... அங்க எப்படினு அங்க போனா தான தெரியும்...

இன்னொரு மேட்டர்.. இந்த பையன் பேரு மணி... பத்தாவது படிக்கறான்.. கூட படிக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்கு அந்த பக்கி.. அந்த பொண்ணோட அப்பன்காரன் ஆட்டோல நாலு அஞ்சு பேரோட வந்து ஒரு காட்டுகாட்டிடு போய்டான்... தேவையா இது.. மூடிகிட்டு இருந்து இருக்கலாமா.... பத்தவப்புலயே லவ்... விளங்குமா இதலாம்...

பெத்தவங்க எல்லாருமே தான் புள்ளய நல்ல புள்ளய வளக்கனும்னு தான் கஷ்டப்பட்டு உழைக்கறாங்க.. மெட்ரிகுலேஷன் பள்ளில சேத்து படிக்க வைக்கறாங்க... ஆனா ?????

ஆனா நா ஒன்ன மட்டும் உறுதியா சொல்வேன்... பொறக்கும் போது எல்லா குழந்தையும் நல்லா குழந்தை தான்.. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே.... இது எந்த அளவுக்கு உண்மை அப்படினு நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்... அதுக்காக நா யாரையும் குறை சொல்றனு அர்த்தம் இல்லை... ஒரு குழந்தையோட ஒவ்வோரு அசைவையும் அம்மா கவனிச்சாலே போதும்.. அந்த பையன் மனசுல ஒரு பயம் இருக்கும்... வாழ்க்கையில இப்ப நல்ல நிலைமைல இருக்க ஒவ்வொருத்தனுக்கும் அவங்க அம்மாவோட பங்களிப்பு அதிகமா இருக்கும்....

என்னடா சதீஷ், சும்மா பசங்களயே குறை சொல்லிகிட்டு இருக்க... இல்ல மச்சான், சட்டப்படி ஆம்பளைங்க பெண்களை பற்றி பேச கூடாது... ஆனா அவங்களும் லேசுப்பட்டவங்க கிடையாது.. பல பசங்க தண்ணி அடிச்சதுக்கு காரணமா கட்டறது அவன் லவ் பண்ண பொண்ண தான்.... எதுக்கு டா இந்த பொழப்பு... போங்கடா போய் வேளையை பாருங்க....

நான் காலேஜ் படிக்கும் போது என்னை ஒரு ஆசிரியர் திட்டிய வார்த்தைகள் பின்வருமாறு "நீ பெரிய பருப்பா இருந்தா அதலாம் வெளிய வச்சிக்கோ" அப்ப நான் முதல் வருடம் தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இன்னைக்கு வரைக்கும் நான் அதை மறக்கல அப்படினு சொல்ல முடியாது, மறக்க முடியலனு வேணா சொல்லலாம்... நானும் அன்னைக்கு என்ன பண்ணேன்னு சொல்லனும்ல... அவங்க சொன்னத எழுதிட்டு போகல அதுக்கு என்னை திட்டிக்கிடே இருந்தாங்க... மேம், இந்த மாதிரிலாம் திட்டாதீங்க அப்படினு தான் சொன்னேன்.. அவ்ளோ தான் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் அவளோ ரணகளம்....

எனக்கு வரவர சென்னையில இருக்கவே பிடிக்கல, ஆனா என்ன பண்றது.. இதான் சொந்த ஊர்னு ஆயி போச்சு..இதல எல்லாம் சகித்து கொள்ளும் மனபக்குவம் சென்னைவாசிக்கு அதிகம் உண்டு.... இப்படியே போய்ட்டு இருந்த என்னப்பா ஆகறது இதுகு ஒரு முடிவே இல்லயா....

**முடிவு**

எல்லாம் வல்ல இறைவா போற்றி.....


என்றும் சென்னை வாசியாக செருப்பு பருப்புடன் பொறுப்பாய்
சதீஷ் மாஸ்......


Friday 8 June 2012

Wipro Man



           தலைப்ப பாத்தலே பயங்கரமா இருக்கா... உங்களுக்கு இருக்காது, ஏன்னா உங்கள பலபேர் அந்த ஆபிஸ்ல வேலை செஞ்சிகிட்டு இருக்கலாம். ஆனா எனக்கு அது பெருய மேட்டர்.. என் இனிய தமிழ் மக்களே இனி நானும் ஐடி நானும் ஐடி...

முதல கதைய எங்க ஆரம்பிக்கலாம்னு யோசிக்கறேன்... அப்புறம் ஒரு மேட்டர், இது தொரர்பான மற்றொரு பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்...

இப்ப மேல படிப்போம், எனக்கு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சது.. அன்னைல இருந்து என் பேரு Wipro Man.... இதை என் class பையன், சங்கர் நாரயணன் தான் வச்சான்... அவன் அப்படி தான் என்னையும் கூப்டான்....

ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருந்தேன், எப்படா விப்ரோல இருந்து எனக்கு மெயில் வரும்னு... வந்துச்சே, என்னை ஜீன் 4ம் தேதி சோழிங்கநல்லூர் விப்ரோக்கு ரிப்போட் கொடுக்க வர சொல்லி இருந்தாங்க... #அப்படி போடு அருவாள....
                                          

எப்படா பொழுது விடியும்னு புரண்டு புரண்டு படுத்தேன், ஜீன் 3ம் தேதி... சுத்தமா துக்கமே வரல.. எப்படியொ பொழுது விடிஞ்சி போச்சு.. ஆறு மணிக்கு அலாரம் வச்சி இருந்தேன்..நா 5.49க்கே எழுந்துட்டேன்... ஹி ஹி ஹி...

அப்படி இப்படினு ஒரு வழியா கிளம்பி சோழிங்கநல்லூர் போய் இறங்கினேன்.. அப்புறம் வழக்கம் போல டாக்குமெண்ட் வெரிபிகேஷன் நடந்து முடிஞ்சி... சாயங்காலம் 6.45க்கு Temporary ID Card தந்தாங்க.... அப்ப என் மூஞ்சிய பாத்து இருக்கனுமே... இந்த ஒரு ஐடி கார்டு வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்...

வருகிற ஜீன்11ந்தேதில இருந்து I AM A WIPRO MAN...... சப்ப்ப்பாபாபாப்பா முடியல.....
இது சும்மா ஐடி கார்டு


Monday 4 June 2012

விளையாட்டின் முடிவுகள்

     ணக்கம் அன்பர்களே.... இப்ப கடந்த இரண்டு பதிவுகளுக்கான விடை எப்படி சுலபமா கண்டு பிடிக்கிறது, எப்படி அதை ஞாபகம் வச்சிக்கறது அப்படிங்கறதெல்லாம் இப்ப பாப்போம்... ரொம்ப நாள் ஆயிடிச்சு பதிவு போட்டு, ஏன் எதுக்குனு அடுத்த பதிவுல சொல்றேன்... கடந்த பதிவுகளின் விளையாட்டை தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்..
விளையாட்டு-2
விளையாட்டு-1

விளையாட்டு -2 க்கான விடை...




17
24
1
8
15
23
5
7
14
16
4
6
13
20
22
10
12
19
21
3
11
18
25
2
9


இதை எப்படி எல்லாரும் கண்டுப்பிடிச்சாங்கனு எனக்கு தெரியாது.. அவங்க எந்த method யூஸ் பண்ணாங்கனு எனக்கு தெரியாது.... நா ஒரு வீடியோ இணைச்சு இருக்கேன்.. அதுல எனக்கு தெரிஞ்ச முறையை உங்களுக்கும் சொல்லி தரேன்... உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்....




என்றும் அன்புடன்
சதீஷ் மாஸ்......


Sunday 27 May 2012

விளையாட்டு - 1ன் விடை & விளையாட்டு - 2

   விளையாட்டு ஒன்னுக்கான விடை அதிகப்பட்சமா எல்லருமே சொல்லிடீங்க... உங்கள் ஆதரவுக்கு நன்றி.... இதற்கான விடை வெளியிடப்பட்டுள்ளது....


8
1
6
3
5
7
4
9
2



இதை கண்டுபிடிக்கவும், ஞாபகம் வைத்துக்கொள்ளவும் ஒரு எளிய வழி உள்ளது இருப்பினும் அதற்கு முன்பாக விளையாட்டு 2யையும் முடித்து விடலாம்....

விளையாட்டு ஒன்றிற்கு சொன்ன அதே நிபந்தனைகள் தான்.. ஆனால் இம்முறை கட்டங்களின் எண்ணிக்கை அதிகம்.. மொத்தம் 25 கட்டங்கள்... 1 முதல் 25 வரை நிரப்ப வேண்டும்... மொத்த கூட்டுத்தொகை 65 ஆக வரவேண்டும்....

நிபந்தனைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y


A=? B=? C=? D=? E=?
F=? G=? H=? I=? J=? 
K=? L=? M=? N=? O=? 
P=? O=? R=? S=? T=? 
U=? V=? W=? X=? Y=? 


இதை காப்பி செய்து கமெண்ட் பெட்டியில் பேஸ்ட் செய்து, கேள்விக்குறியை நீக்கிவிட்டு தங்கள் பதிலை அளித்து எண்டர் செய்யவும்... 



என்றும் விளையாட்டுடன்
சதீஷ் மாஸ்......
தங்கை நந்தினியுடன்


Saturday 26 May 2012

விளையாட்டு - 1

     னைவருக்கும் வணக்கம்... எப்பவுமே எதாவது பதிவு போட்டு அத எல்லாரும் படிக்கறது, சதாரண விஷயம் தான்.... இப்ப அதை அசதாரணமான விஷயம் ஆக்கலம் வாருங்கள்... 

ஒரு சிறு விளையாட்டு போட்டி.இதுக்கு உங்க ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குனு பாத்துட்டு இந்த விளையாட்டு பதிவை தொடர்ந்து எழுதுவதா என்று பாக்கலாம்...


விதிமுறைகள்...
  • கீழே மொத்தம் ஒன்பது கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. (3*3=9)
  • 3 Rows 3 Columns.. அவற்றிக்கு A to I என ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு எழுத்து கொண்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது..
A
B
C
D
E
F
G
H
I
  1. இப்போது கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் 1,2,3,4,5,6,7,8,9 என்னும் எண்களை நிரப்ப வேண்டும்.
  2. கொடுக்கப்பட்டுள்ள 9 எண்களை உங்க எண்ணப்படி எந்த கட்டங்களில் வேண்டுமனாலும் நிரப்பலாம்.. 
  3. ஒரு முறை உபயோகப்படித்திய எண்ணை மீண்டும் வேறு கட்டத்தில் நிரப்பக்கூடது... like as SUDUKU...
  4. கட்டங்களில் எண்களை நிரப்பிய பிறகு, அதன் கூட்டுத்தொகை 15 என்று வர வேண்டும்.. கூட்டுத்தொகை எப்படி அமைய வேண்டும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
  5. A+B+C=15
  6. D+E+F=15
  7. G+H+I=15
  8. A+E+I=15
  9. G+E+C=15
  10. A+D+G=15
  11. B+E+H=15
  12. C+F+I=15
  13. எந்த வரிசை முறையில் கூட்டினாலும் 15 என வர வேண்டும்..
  14. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..
  15. மிக முக்கியமான நிபந்தனை ஒரு முறை உபயயோகித்த எண் மீண்டும் வர கூடாது...
  16. எ-கா: சரியான நிரப்புதல்:
 8
 6
 1







 8



 6



 1




 1

 6

 8




 8


 6


 1




  1. தாவறான நிரப்புதல்:
 6



 6



 3

எண்கள் எக்காரணம் கொண்டும் ரிபீட் ஆக கூடாது...

கொடுத்து இருக்கும் தகவல் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.... உங்கள் பதிலை கமெண்டில் தெரிக்கவும்...

கமெண்ட் மாடுரேஷன் தற்காலிகமாக நீக்கப்படுகுஇறது.. விடை, அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்... விடையை கண்டுபிடிக்கும் எளிய முறையும் தெரிவிக்கப்படும்..

A=? B=? C=? 
D=? E=? F=? 
G=? H=? I?

இதை காப்பி செய்து கமெண்ட் பெட்டியில் பேஸ்ட் செய்து, கேள்விக்குறியை நீக்கிவிட்டு தங்கள் பதிலை அளித்து எண்டர் செய்யவும்... 



என்றும் விளையாட்டுடன் 
சதீஷ் மாஸ்.............






Thursday 24 May 2012

சதீஷ் காபிஷாப் - 25/05/2012


  அனைவருக்கும் வணக்கம்.... நா ஒன்னே ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டேன், நா பதிவுனு எதயாச்சும் போட்டா யாரும் அந்த பக்கம் போறதே இல்ல.. ஆனா காபிஷாப்க்கு நல்ல ரெஸ்பானஸ்... வாங்கோ நாம தொடரலாம்...
------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும்:
பல பரப்பரப்புக்கு அப்புறம் பதிவர் சந்திப்பு முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னும் இருக்கவே செய்கிறது. பல பதிவர்கள் தொடரும் என்று போட்டு பதிவை எழுதி தள்ளி இருக்கிறார்கள்... #அடா போங்கடா நீங்களும் உங்க சந்திப்பும் அப்படினு அவசரப்பட்டு சொல்லிடாதீங்க... நா சூடானேன்ன்ன்ன்ன்ன்ன் சுளுக்கு எடுத்துறுவேன் போகற மாத்திரை மட்டுமே கொடுப்பேன்..

ஒரு சிறு முயற்சியாக....


எனக்கு தெரிந்த பெயர் மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்...... 
------------------------------------------------------------------------------------------------------------
ஆசை:
மனிதனோட மனசு குரங்கு மாதிரினு பெரும்பாலும் சொல்லுவாங்க.. ஆமா அது நூத்துக்கு நூறு உண்மை தான். மனிதனுடைய ஆசை அடங்கவே அடங்காது, அது ஒரு காமத்தீ... மனிதர்கள் யாரும் ஆசை பட கூடாது என்று புத்தர் ஆசைப்பட்டார் என்பதே உண்மை...

இப்ப என்னோட ஆசை என்னவென்றால் ஒரு மென்நிரலி(iPad) வாங்க வேண்டும். ஒரு ஆன்ட்ராய்டு மொபைல் வேணும். கடவுளே சீக்கரமா ஏற்பாடு பண்ணுங்க....
------------------------------------------------------------------------------------------------------------
காலேஜ்:
தம்பியோட பன்னிரெண்டாவது ரிசல்ட் வந்துரிச்சு.. நல்ல மார்க் எடுத்து இருக்கான்.. ஏற்கனவே காலேஜ் சீட் பிளாக் பண்ணியாச்சு அதனால நோ பிராப்ளம்.. சரவணன் B.E biotech engg...

ஆனா ஒரு சின்ன வருத்தம் என்னான்னா அவனுக்கு அம்மா தர லேப்டாப் கிடைக்காது... மம்மீ மம்மீ... ஆனா மக்களே உங்கள் ஏரியால இருக்கற பசங்களுக்கு ஒரு அட்வைஸ் நீங்க தாங்க.. அதாவது, இந்த வருஷம் எந்த காலேஜ்லலாம் லேப்டாப் தந்தாங்களோ அந்த காலேஜ்ல சேர சொல்லிங்க... 32000ரூ மதிப்புள்ள மடிகனிணி ஓசில கிடைக்கும்...
------------------------------------------------------------------------------------------------------------
இந்தவார பிளாக்கர்:

ஆயிசா ஃபரூக்,
இவரை நான் முகபுத்தகத்தில் நான் கண்டுபிடித்தேன்.. பல அருமையான பதிவுகளை எழுதி உள்ளார். சில போட்டோகாப்பி பதிவும் இருக்கு... அவரை பத்தி அவருடைய பிளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்... அவருக்கு இதுவரை ஒரு ஃபலோயர் கூட இல்லை.. அவருடைய பதிவுக்கு ஒரு கமெண்ட் கூட இல்லை... ஏன் என அவருடைய பிளாக்கில் உமக்குதெரியும்....



------------------------------------------------------------------------------------------------------------
தமிழும் தாய்லாந்தும்:

ஆயிரம் ஆயிரம் வருடங்கள் தொன்மை வாய்ந்த மொழி தமிழ் என்பதில் ஐயமே இல்லை... அதற்கு இதுவே சாட்சி... 
------------------------------------------------------------------------------------------------------------
கமெண்ட்:
ம்ம்ம் போன பதிவில் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் எனக்கு கமெண்ட்டும் பாராட்டும் தந்து இருந்தார்... ரொம்ப நல்லா இருந்துச்சு.. என் பிளாக்கில் ஜாக்கி,கேபிள்,சுரேகா, லக்கிலுக் யுவா, இன்னும் பலர் கமெண்ட்டுகள் அங்காங்கு இருக்கிறது.. டோன்ட் வேரி பீ ஹாப்பி...
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:
மற்றவர் துயரங்களை பகிர்ந்து கொள்ள முன் வராத கல் நெஞ்சங்கள் மகா கேவலமானவை....

நல்லதுக்கு போய் நிக்கலனாலும் கெட்டதுக்கு போய் நிக்கனும்'னு பெரியவங்க சொல்லுவாங்க.... பல பெருசுங்க மண்டய போட்டு பல குடும்பங்களை சேத்து வைக்கும்.. சில சமயம் சொத்து பிரச்சனையில் மீண்டும் சண்டை வரவும் வாய்ப்பு இருக்கு...
------------------------------------------------------------------------------------------------------------
அனல் பறக்கும் வெயில் காத்து சுத்தமா தாங்க முடியல.. பொன்னுங்க எல்லாம் முகத்தை அழகா முடிக்கிறாங்க... அதுவும் நடந்து போற பொன்னுலாம் துப்பட்டா போட்டு மூஞ்ச மூடிக்கறாங்க... ம்ம்ம் ரெண்டு துப்பட்டா கொண்டு வராங்க தெரியுமா.. ஒகேஓகே படத்துல ஒரு சீன்ல, ஒரு பொன்னோட முகத்துல இருக்கற துப்பட்டாவ எடுத்து பாத்துட்டு உதயநிதி காரி துப்புவாரு... அதுப்போல பொன்னுங்க முகத்தை மூடிக்கறதுல நமக்கும் ஒரு விதத்திலு நன்மை தான்..

                                          
------------------------------------------------------------------------------------------------------------
டாட்டோ போட்டோ:
பொது இடத்துல வச்சி பாத்துடாதீங்க... அப்புறம் மானம் போய்டும்... போட்டோல இருக்கற கலையை மட்டும் ரசிக்கவும்.. அது தான் எல்லாருக்கும் நல்லது.... அதில் உள்ள அழகை பாருங்கள். அதை வரைஞ்சவனின் கை பக்குவத்தை காணுங்கள்....
அதை இந்த எடுத்துல போட முடியல சோ இந்த லிங்க அ கிளிக் பண்ணுங்க.. நாம பேஸ்புக்குக்கு போகலாம்..
------------------------------------------------------------------------------------------------------------

என்றும் உங்களுடன்
சதீஷ் மாஸ்.....