என் தோழர்கள்

Friday 16 September 2011

என்ன ஆச்சு பதிவுலகத்திற்கு

அட நானே எப்பயாச்சும் தான் இந்த பக்கம் வரேன்.. இங்க வந்தா மனசுக்கு நிம்மதியா இருக்கும் கொஞ்சம்... பதிவுலகத்த தான் சொல்றேன்...


எத்தன பேர் நோட் பண்ணாங்கனு தெரியல... என் பிளாக்கு ஜொரம் வந்துருச்சு.. எல்லாம் ஒரே சிகப்பு சிகப்பா தெரியுது.. ஒன்னு கூட படிக்க முடியல.. அவ்ளோ தான் என் பிளாக்குக்கு சங்கு ஊதிடாங்கனு நினைச்சேன்..




இரெண்டு நாளா நானும் ரீப்ரெஸ் பண்ணி பண்ணி பாத்துடேன், ஒன்னும் வேலைக்கு ஆகல... பிளாக்குல ரைட் சைடுல வர எல்லா கேட்ஜேட்சும் கீழ அடியில போய் உக்காந்துருச்சு.. ம்ம்ம் கடைய சாத்திட வேண்டியது தான்...


தெரிஞ்ச நண்பருக்கு போன் பண்ணி இன்னைக்கு காலையில விசயத்த சொன்னேன்.. அவர் என்ன பிரச்சனனு பாத்து சொல்ரனு சொன்னாரு.. காலேஜ் போய்ட்டு வந்ததும் வராதுமா பிளாக்க தான் ஓபன் பண்ணி பாத்தேன்.. ம்ஹீம் ஒரு மாற்றமும் இல்ல...


அப்புறம் எனக்கே இருக்குற ஏழாவது அறிவ யூஸ் பண்ணி, டாஸ்போர்டுல இருக்குற டிசைனை ஓபன் பண்ணி எதாச்சும் பண்ண முடியுமானு பாத்தேன்... இவரு பெரிய பில்கேட்ஸ், இவரு நினைக்கறது எல்லாம் நடந்துடுமா...


அட போங்கயா... பிளாக்கு ஒரே சிவப்பு கலருல இருந்துச்சு அதனால தற்காலிகமா வேற டெம்பிளேட் மாத்தி இருக்கேன்.. இப்ப கொஞ்சம் பரவால, என் பிளாக்க பாக்க முடியுது, படிக்கவும் முடியுது...


ரைட் சைடுல வர எல்லா கேட்ஜேட்டயும் அழிச்சுடேன்.. ரொம்ப கஷ்டமா இருக்கு... அத மறுபடியும் எப்ப சேக்க போறானு தெரியல...




**இதுக்குலாம் காரணம் என்ன ????


கூகிள் நிறுவனம் அவங்களோட சைன் இன் பக்கத்த மாத்தி அமைச்சி இருக்காங்க.. அதன் காரணம்னு எனக்கு தோன்றுகிறது...


**பின்குறிப்பு :::


இது எல்லா பதிவருடைய பிளாக்குலயும் நடந்து இருக்கு.. எல்லாருமே பாதிச்சு இருக்காங்க... என்ன பண்ணலாம் னு யாராச்சும் ஒரு முடிவு சொல்லுங்க ஐயா..


1. எல்லா பதிவரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கிட்டு போய் கூகிள் நிறுவனத்தை முற்றுகை இடலாமா?


2. பழைய நிலைக்கு எங்கள் பிளாக்கை திரும்ப தரும் வரை நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போறோம்னு வெறும் அறிக்கை மட்டும் விடலாமா?


3. அடிதடி கலவரம் கூகிள் நிறுவனத்தை அடித்து நொறுக்குதல் என ஆர்ப்பாட்டம் செய்யலாமா?


4. இதுக்கு மேலயும் நான் எதாச்சும் எழுதுனா கலவரத்தை தூண்டும் விதமாக பதிவு போட்டதுக்காக போலீஸ் என்னை முற்றுகை இடுவார்கள்..


5. சிம்பிளா சொல்லாட்டா, யாராவது நல்லா இங்கிலீஸ் தெரிஞ்ச பெரிய மனுசங்க கூகிளுக்கு ஒரு மெயில் அனுப்பி என்ன பிரச்சனனு கேளுங்கப்பா...


**அட நீங்களுமா??


எனக்கு இந்த பிரச்சன இல்லனு மார்த்தட்டி கொள்ளூம் ஒவ்வொரு பதிவருக்கும் ஒன்னு சொல்லிகறேன்.. பாதிச்சது நான் மட்டும் இல்லங்க, நீங்களும் தான்.. போய் உங்க பிளாக்க பாருங்க பாஸ்... பிம்பிலாக்கி பிலாபி...
www.*****.com என மாற்றி கொண்டு தொடர்ந்து கூகிளில் எழுதும் பதிவருக்கும் வச்சிடங்க ஆப்பு...


இதுக்கு ஒரு முடிவே இல்லாயாப்பா.... இப்ப எல்லா பிளாக்ஸ்க்கும் வந்து இருக்கற இந்த ஃபீவருக்கு, சதீஷ் மாஸ் ஆகிய நான் "பிளாக்ஸ் காய்ச்சல்" என பெயரிடுகிறேன்.. ஆங்கிலத்தில் "Blogs Fever" என அன்போடு அழைக்கபடட்டும்...




(தற்காலிகமா என் பிளாக் கலர மாத்தி இருக்கேன்)


சதீஷ்.......


8 comments:

Philosophy Prabhakaran said...

எங்க ப்ளாக் எல்லாம் நல்லாத்தான் இருக்கு தம்பி...

சதீஷ் மாஸ் said...

நல்லா கண்ண திறந்து பாருங்க....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காய்ச்சலில் இருந்து சீக்கீறம் விடுபடிங்க சதீஷ்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்ல...

ஒரு வேளை நான் இந்த வாரம் முழுவதும் பதிவுலகில் அதனால தெரியவில்லையோ என்னவோ...

Sivakumar said...

நீங்க விஜயகாந்த் ரசிகர். அதான் எல்லாம் செவ செவன்னு தெரியுது. எங்க ப்ளாக் எல்லாம் நல்லாருக்கு. டாட் காமுக்கு மாத்தியும் எந்த பிரச்னையும் இல்ல.

N.H. Narasimma Prasad said...

என்னுடைய ப்ளாக் கூட நல்லா தான் இருக்கு சதீஷ். ஒன்னும் பிரச்சனை இல்லையே.

சதீஷ் மாஸ் said...

நா சொல்றது யாருக்குமே புரியலனு தான் நினைக்கறேன்... Here i am talking about only GADGETs...

சதீஷ் மாஸ் said...

இப்ப எல்லாமே சரியாடுச்சு... சோ நோ பிரபளம்....