என் தோழர்கள்

Thursday 15 September 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 14/09/2011

செய்திகள் வாசிப்பது :
மிக பரப்பரப்பாக தொடங்கப்பட்ட ஒரு விவகாரம் இப்ப எந்த நிலையில இருக்குனு கூட நிறைய பேருக்கு தெரியல... 2ஜி ஸ்பெக்ட்ரம் பத்தி தான் சொல்றேன்..


ராசா அவர்கள் பிரதமருக்கும் சிதம்பரத்திற்க்கும் இதில் தொடர்பு உள்ளது என சொன்ன ஒரே காரணத்துக்காக மொத்த மேட்டரயும் ஆரம்பத்துல இருந்து மாத்தறது மிக பெரிய தப்பு... இப்ப நிலைம என்னனா யாருமே தப்பு செய்யல.. ஊழல் நடக்கல, அரசுக்கு 7000கோடி லாபம் தான்.... 


மேலும் புள்ளி விவரத்தோட ஆதாரம் வேணும்னு கேக்கற (கேட்ட)அப்பாவிகள் அனைவரும் "புதிய தலைமுறை"  இதழில் வெளிவந்துள்ள தலையங்கத்தை பார்க்கவும்....


யூ டான்ஸ் :
பிரபல பதிவரான கேபிள்சங்கர் அவரோட நண்பர் சேர்ந்து புதுசா ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சு இருக்கிறார்கள். அந்த ஸ்கூலுக்கு பேர் தான் "யூ டான்ஸ்" .. அங்க அட்மிஷன் ஃபீஸ் கிடையாது நன்கொடை ஏற்கபடமாட்டாது. பதிவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு, குறிப்பாக தமிழ் பதிவர்கள் வரவேற்கபடுகிறார்கள். என்னை போன்ற வேர்ல்ட் ஃபேமஸ் பதிவர்கள் சீக்கரம் வந்து சேரவும் என அறிவிக்கப்படுகிறது...


மேலும் அறிய, www.udanz.com




விளம்பரம் :
எத்தன நாளைக்கு தான் இப்படியே காலத்த ஓட்டறது. நமக்குனு ஒரு வெளம்பரம் வேணாமா? அப்படினு யோசிக்கும் போது தான் இந்த ஐடியா வந்துச்சு... மிக பெரிய கார் கம்பெனியோட முதலாளியான ஹென்றி ஃபோர்ட், தான விளம்பரத்த தேடி போகமலயே அவரும் அவருடைய காரும் சந்தையில் விளம்பரபடுத்தப்பட்டது... தீ சேம் ஐடியா.....


என்னை பற்றி கூகுள் பஸ்ஸில் நடந்த ஒரு உரையாடல் இது... கொஞ்சம் படிச்சு பாருங்க.. என் விளம்பர யூத்தி தெரியும்..


பஸ்ஸில் என் பயணம்... 




கவிதை :
சொந்த கவிதை, நல்ல இல்லனு சொல்லிடதீங்க...


காகிதம் பேனா
இருந்தால் கவிதை வராது
காதலும் சோகமும் 
இருந்தால் கவிதை வராது
எழுத்தும் எழுத்துவடிவமும்
இருந்தால் போதும் - தலைப்பே
இல்லாமல் கவிதை வரும்....


சின்ன வயசுல
பிஞ்சு மனசுல
விவரம் அறியா பருவத்துல
பேச பழகின நேரத்துல
ஓடி ஆடின வேளையில
என்ன நிக்க வச்சு
ஒத்த வார்த்த சொன்னா
எங்க ஆத்தா
நீ என் குல சாமிடானு
ஆனா எனக்கு தான்
அவங்க சாமி


பாடல் வெளியீடு :
இன்று காலை தான் அந்த பாடலை முதல் முறையாக கேட்டேன்.. காதல் பத்தி என்னமா சொல்லி இருக்காங்க... இப்ப மிக பிரபலமா இருக்கற 
"Yogi B & Co" அவர்களுடய ஒரு ஆலபத்தில் உள்ள பாடல் தான்.. "TRUTH HURTS" என்னும் ஆல்பத்தில் உள்ள பாடல் என நினைக்கிறேன்..

" கண்ணில் கண்ணில் காதல் வைத்து என்னை கொல்லாதே, 
இன்னும் உன்னை நம்புவேன் என்று பெண்ணே நம்பாதே, 
கண்கள் மூடி காதல் செய்தால் கற்று தந்தாயே, 
உண்மை தெரிந்து நான் இன்னும் உன்னை ம்ம்ம்ம்ம்ம்ம் ""

இதான் பாடலின் ஆரம்ப வரிகள், இதுக்கு அப்புறம் வர ராப்பிங் (Rap) தான் பாடலோட ராக்கிங் ஸ்டைல்....


பழசு ஆனா மவுசு :
எதாவது மூலையில சத்தமே இல்லாம பல வருடமா பதிவு எழுதறாவங்கல இங்க வெளிச்சம் போட்டு காட்ட போறேன்..
அந்த வரிசையில் இன்று " நல்லவன்" 
இவருடய பதிவும் இவரும் மிக்க நலமே.. திருநங்கை அக்காகளை பற்றி இவர் எழுதி இருக்கும் பதிவு அருமை.. மேலும் அறிய அவருடய தளத்திற்கு சென்று பார்க்கவும்...


என் நோக்கம் :
எதாச்சும் உருப்படியா எழுதனும் தான் நினைக்கிறேன்... என் பதிவை படிக்க வரவங்களூக்கு இது பொழுதுபோக்கா தான் இருக்கனும்.. அழுகை கண்ணீர் சோகம் வருத்தம் எனக்கு சுத்தமா பிடிக்காது... அதனால தான் முடிஞ்ச வரைக்கும் அதலாம் தவிர்க்க பாக்கறேன்....




சதீஷ்......


5 comments:

Prem S said...

//ஆலபத்தில் உள்ள பாடல் தான்//நல்ல இல்லனு சொல்லிடதீங்க...//

தமிழ் பிழைகளை கவனியுங்கள் அன்பரே

Sivakumar said...

பிரபல பதிவரா கேபிள்சங்கர்???

சதீஷ் மாஸ் said...

சி.பிரேம் குமார் said...

//ஆலபத்தில் உள்ள பாடல் தான்//நல்ல இல்லனு சொல்லிடதீங்க...//

தமிழ் பிழைகளை கவனியுங்கள் அன்பரே


பிழை வரவே கூடாதுனு ரொம்ப ட்ரை பண்ணேன், ஆனா முடியமாட்டங்குது.... அடுத்த பதிவு பிழை இல்லாம போடறேன்...

சதீஷ் மாஸ் said...

! சிவகுமார் ! said...

பிரபல பதிவரா கேபிள்சங்கர்???


அப்படி தான் சொல்லனுமாம், இல்லனா அடிப்பாங்க...

சதீஷ் மாஸ் said...

வெளங்காதவன் said...

:)


நீங்க பக்கம் பக்கமா எழுதி இருக்கற கமெண்ட் ஆ படிச்சுட்டு நா ஆனந்த கண்ணீர் விட்டேன்...