என் தோழர்கள்

Tuesday 22 May 2012

சென்னை பதிவர் சந்திப்பு - 20/05/2012

               முதலில் மரியாதை, சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு விழாவிற்கு கடுமையாக உழைத்த அனைத்து யூத் பதிவருக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம். இந்த மாதிரி மொத்தமா மரியாதை பண்ணிட்ட போதும்.. அப்புறம் அவா பேரு விட்டு போச்சு, இவா பேரு விட்டு போச்சுனு சொல்லிட கூடாதுல....

இனிமே நம்ம ஸ்டைலில் பதிவு போடலாம். எனக்கு இந்த பெரிய பொறுப்பு தந்த மற்றும் தராத பதிவருக்கு நன்றி...

இப்பதிவு முழுக்க என் கண்ணோட்டத்தின் வழியே பயணம் ஆகும். (கதை அப்படினு ஒன்னு இருந்தா அது கதாப்பத்திரம் யாரவது ஒருத்தவங்க மீது பயணம் ஆகியே வேண்டும் என 50லட்சம் ஹிட்ஸ் வாங்கிய சென்னை ஆதினம் என்னும் மிகவும் யூத் பதிவர், எனக்கு அறிவுரை அளித்தார்..)


1.நேரம் சரியாக 3.30 மணி இருக்கும், அறக்கப்பறக்க சென்னை டிராப்பிகிலும் சென்னை வெயிலிலும் பைக்கை ஓட்டிய படி பறந்தேன்.

2.கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் போய் சேர்ந்து, பைக்கை பார்க் பண்ணிட்டு பாத்தேன்.. ஒரு சின்ன பையன் போனில் பேசிட்டு இருந்தான்.. அவரை பாத்ததும் தெரிஞ்சி போச்சி வெளியூரில் இருந்து வந்து இருக்கும் பதிவர்னு.. எப்படி நீ அதை கண்டு பிடிச்ச அப்படினு கேள்வி கேக்க கூடாது.. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..

3.போனை வெளிய எடுத்து நம்ம பிலாசபி சார்க்கு போன் போட்டேன். எப்பவும் மிஸ் கால் கொடுத்து தான் பழக்கம், ஆனா போன் பண்ணி நான் வந்து சேந்துட்டேன் அப்படினு சொன்னேன். பிலாசபி அப்ப தான் அசோக்பில்லர்'ல இருந்தாறு அதனால என்னை உள்ளே போய் இருக்க சொன்னரு..

4.அடுத்து விழாக்குழுவின் முக்கிய புள்ளி மற்றும் தன் கை காசை போட்டு செலவு செய்யும் வள்ளல் மற்றும் சென்னையின் அடுத்த ஆதினம் என பல சிறப்புகளை உடைய மெட்ராஸ்பவன் சிவகுமார்'க்கு போன் பண்ணி, நான் வந்து இருப்பதை சொன்னேன்.. அவர் என்னை உள்ளே வருமாறு அழைத்தார்..

5.உள்ளே சென்றதும் தலைவருக்கு சலாம் போட்டேன். (பிகாஸ் அடுத்த ஆதினம் அவர் தானே..)... அவர் என்னை பல பதிவருக்கு அறிமுகபடுத்தி வைத்தார்.. அவங்க பேரு ஆரூர் மூனா செந்தில்... அவர் கலைஞர் தொகுதியை சேர்ந்த என் புதிய நண்பர்.. (அவர் இதை படிக்கும் போது கண்டிப்பாக சிரிப்பார், காரணம் சொல்லமாட்டேன்).. கோகுல் அவர்களை போன சந்திப்பிலே பார்த்து உள்ளேன்... கடலூர் காரர்...(ஜாக்கி சார் ஊருங்கோ)..

6.புக் பேலஸ்'ல இருந்த புத்தகத்தை சும்மா ஒரு நோட்டம் விட்டேன். ஆனா ஒன்னு கூட வாங்கல... எவ்ளோ நேரம் தான் நானும் சீன் போடறது, முடியல.. 90% தள்ளுபடி என்று சொல்லி பிறகு இல்லை அது வெறும் வதந்தி என்று சொன்ன வேடியப்பன் அவர்களை என்ன பண்ணலாம்..( வேடியப்பன் : கொய்யால, ஓசில இடம் கொடுத்தா படுக்க பாய் கேப்பியே.. ஹி ஹி ஹி)

7.நேரம் ஆக ஆக பல பதிவர்கள் வந்தனர். அவர்கள் அனைவரிடமும் என்னை நானே அறிமுகப்படுத்தி கொண்டேன்.. அக்கப்போர், நாய்நக்கஸ், உணவு உலகம் ஆபிசர், சென்னைப் பித்தன்(ர்), புலவர் இராமனுசம்(ர்) மற்றும் பலர்.. டிவிட்டர் கார்க்கியும் கூட, சம்பத்... நினைவில் நிற்காத பெயர்களை கொண்ட பல பதிவர்கள்...

8.பிலாசபி பிரபா அவர்களும் அஞ்சாசிங்கம் செல்வின் அவர்களும் ஒருசேர வந்தனர்.. அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்தேன்..

9.எல்லாரும் அமர்வதற்காக சேர் அடுக்கி வைக்கும் வேலை மும்முரமாக நடந்தது... அதை முழுவதும் ஏற்று செய்த நபர் அந்த புக் பேலசில் இருந்தார். அந்த நண்பரின் பெயர் தெரியவில்லை.... மன்னிக்கவும்.. அவருக்கும் நன்றிகள் பல..

10.ஒவ்வோருவருக்கும் தனி சிறப்பு பல இருக்கிறது. அக்கப்போரை பார்க்கும் போது, எதோ நாலு ஆளை போட்டு தள்ளிட்டு நேரா பதிவர் சந்திப்புக்கு வந்ததை போல இருந்தது...

11.நாய்-நக்கஸ் அவர் தான் எண்டர்டெயிண்மெண்ட்.. நல்லா பேசினாரு... அவங்க கும்பலா உக்காந்துக்கிட்டு கமெண்ட் கொடுத்தத நீங்க மிஸ் பண்ணிடிங்க சார்..

12.எங்கள் கவுண்டமணி ரசிகர் ஆன "அஞ்சா சிங்கம்" தன்னோட மடிக்கணிணியை எடுத்து கிட்டு வந்து.. மொத்த பதிவர் சந்திப்பையும் நேரடி ஒளிப்பரப்பு செய்தார்.. அது தான் எங்களின் வெற்றி.. சாரி அவர்களின் வெற்றி.. . அந்த நேரடி ஒளிப்பரப்பை பார்த்த அனைவரும் நல்லா இருக்குனு சொல்லி இருந்தாங்க. ஆடியோ அருமையாக இருந்ததாகவும், விடியோ சரியாக தெரியவில்லை என்று சொல்லி இருந்தார்கள்.. வெப்கேமிரா'ல அந்த அளவுக்குதான் தெரியும் ஆகையால் அடுத்த முறை அதிக மெகாபிக்சல் கொண்ட வெப்கேமிரா பயன்படுத்தப்படும் என விழாக்குழுவினர் சொல்லி இருக்காங்க.. பாப்போம், அதுக்கு மொத்த ஸ்பான்சர் கேபிள்ஜி என உளவுத்துறை சொல்லி இருக்கு... அதையும் பாக்கலாம்.. (அந்த நேரலைக்கு முதல் கமெண்ட் கொடுத்த பெருமை எனக்கும் கோகுலுக்கும் தான் சொந்தம்.. சதீஷ்:ம்ம் நல்லா இருக்கே.. கோகுல்: வேற என்னத்த சொல்ல டெக்னாலஜி வளந்து போச்சு..) கூடுதல் தகவல்:மொத்தம் 166viewers என்பதை அஞ்சா சிங்கம் மார்த்தட்டி கொண்டு பிலாசபியிடம் சொன்னார். இது ஒரு நல்ல தொடக்கம்..

13. மெதுவாக உள்ளே நுழைந்தார்கள் சங்கர்நாரயணனும் செந்தில் அவர்களும்.. அது யாருடா புதுசா அப்படினுலாம் கேக்க கூடாது.. நம்ம கேபிள்ஜியும் கேஆர்பியும் தான்.. இவர்கள் தானே இப்போது சென்னையை கலக்கி கொண்டு இருக்கும் பிரபலங்கள்.. பல்ல காட்டிக்கிட்டே நான் போய் கேபிள்ஜி கிட்ட பேசினேன்.. ஹலோ சார், நான் தான் சதீஷ்மாஸ்.. போன சந்திப்புல பாத்திங்களே ஞாபகம் இருக்கா... உன்னை மறக்க முடியுமா நீதான ஜாக்கி சார் பத்தி பேசனது என்று ஒரு போடு போட்டார்.. நான் இடத்தை காலி பண்ணிட்டேன்ல.. பிகாஸ் எனக்கு சப்போர்ட் பண்ண என் தல "ஜாக்கி" அங்க இல்லை.... மிக பெரிய ஏமாற்றம் தான்....

14. அங்க இருந்து கழண்டுகிட்டதுல நான் செந்தில் அவர்களை பாத்து பேச முடியாம போய்டிச்சு. ஆனா ஒரு மணிநேரம் கழித்து கேஆர்பி.செந்தில் அவர்கள் என்னை பார்த்து ஹாய் எப்படி இருக்க எனக் கேட்டார். நான் வழக்கம் போல திரும்பி பின்னாடி யாராச்சும் இருக்காங்கலா என பாத்தேன்.. சார் என்னையா கேக்கறீங்க என்றேன். உன்னைதான்யா கேக்கறேன் என்றார். #நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. அவரின் இந்த செயல் என்னை ஒரு நிமிடம் ஆட வைத்தது... பிரபலமா இருந்தாலும் அங்க எல்லாரும் ஒன்னு தான் அப்படினு கேஆர்பி அவர்கள் நிரூபிச்சுட்டார்.. ( அந்த வானத்தை போல மனம் படைச்ச வள்ளவரே...)

15.அப்புறம் யாரு நம்ம மெட்ராஸ்பவன் சிவகுமார் தான்.. அவரை எவ்வளவு பாரட்டினாலும் தகாது.. அவ்ளோ உழைத்து இருக்கார் அந்த மாமனிதர்.. மொத்த நிகழ்ச்சிக்குமே அவர் தான் காரணம். கதை, திரைக்கதை, வசனம், லொக்கேஷன், இயக்கம், தயாரிப்பு இப்படி பல முகங்களுக்கு சொந்தகாரர்.. அவருக்கு பல நல்உள்ளங்கள் உதவி செய்தனர்.. அவர்களுக்கும் எங்கள் குழு சார்பாக நன்றிகள்... பிளக்ஸ் பேனரில் எங்கள் ஆஸ்தான குரு கவுண்டமணி இல்லாதது வருத்தமே.. கூடுதல் தகவல்: அடுத்த பதிவர் சந்திப்பு "சென்னை பதிவர் சந்திப்பு என்று அழைக்கப்படமாட்டாது... அதற்கு பதிலாக "மெட்ராஸ் பதிவர்கள் சந்திப்பு" என அன்போடு அழைக்கப்படும்.. ஹலோ மெட்ராஸ்பவன் சிவகுமார் சார், என்ன ஒகே வா?

16.போன சந்திப்புக்கு வெளியூர் பதிவர்கள் குறைவு தான். ஆனால், இம்முறை அடேங்கப்பா எத்தன வெளியூர் பதிவர்கள் தெரியுமா.. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்ப்பட்ட வெளியூர் பதிவர்கள்.. இது யாரும் எதிர் பாக்காதது. ஓட்டலில் ரூம் போட்டு தங்கி பதிவர் சந்திப்புக்கு வந்தனர்.. என்ன ஒரு பாசம் உள்ள பயபுள்ளைகள்.... அடுத்த முறை பதிவர் சந்திப்பை எதேனும் கல்யாணமண்டபத்தில வச்சி மொத்த தமிழக பதிவரையும் அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதற்கு இதான் சாட்சி..

17. ம்ம்ம் அடுத்து விஷாலினி என்னும் சிறுமி... கனிணி துறையில் பல சாதனைகள் புரிந்துள்ளார்... என்ன என்னமோ பேசிச்சு அந்த புள்ள, என் மரமண்டைக்கு தான் ஒன்னும் புரியல... மிகவும் அதிகமான, பல புது தகவல்கள் தன்னுள்ளே வைத்துள்ளார்.. அவரை பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்... food officer link..

18. தென் இந்தியாவிலே ஈகோ என பெயர் பெற்ற ஒரே மனிதர் யோகநாதன்.. பல மரங்களை தென் தமிழகம் முழுவதும் நட்டு மிக பெரிய சாதனையை சத்தம் இல்லாமல் செய்துள்ளார்.. அவரை பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்...

19. கோகுல் அவர்கள் தான் இந்த வருடத்தின் மிக சிறந்த யூத் பதிவராக நாங்களே தேர்ந்து எடுத்து அவரை கௌரவித்தோம்... #புதுமாப்பிள்ளைக்கு பம்பம்பரே.... புதுமாப்பிள்ளைக்கு பம்பம்பரே....

20. யோகநாதன், கோகுல், விஷாலினி இவர்கள் மூவருக்கும் நினைவு பரிசாக புத்தகமும் "சென்னை பதிவர்கள்" என பெயரிடப்பட்ட கேடயமும் விழாக்குழுவினர் சார்பாக தரப்பட்டது... #சென்னை பிளாக்ர்ஸ் யூ ஆர் கிரேட், எங்களை ஆசிர்வாதம் பண்ணூங்க...

21. இவங்க எல்லாரும் பேசி முடிக்கறதுக்குள்ள நேரம் 8 ஆயிடுச்சு.. வந்து இருந்த பதிவர்கள் தங்களை அறிமுக படுத்தி கொள்ள மட்டுமே நேரம் அளிக்கப்பட்டது.. அது எமக்கு பெரும் ஏமாற்றம்... இன்னும் நேரம் கிடைத்து இருந்தால் பல பதிவர்கள் பேசி இருப்பார்கள்...

22.புட் ஆபிசரின் நண்பர் "டெல்லியில் உள்ள ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியர்" வந்து இருந்தார்.. அவர் சமூகத்தில் நிலவும் அக்கிரமங்களை பற்றி விளக்கமாக பேசினார்... பல உண்மைகளை சொல்லி பரபரப்புக்கு குறை இல்லாமல் செய்தார்..

23.பலபேர் தங்களுடைய பிளாக்கில் எழுதுவதற்காக நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தனர். அதில் என்னை மிகவும் கவர்ந்தவர் தமிழகத்தின் பெயரில் தன் பெயrai கொண்டு உள்ளதாக சென்னை பித்தன் அவர்கள் சொன்னார்.. ஏனெனில் அவர் உண்மையாகவே நோட்ஸ் எடுக்கும் நோட்டை கொண்டு வந்து நோட்ஸ் எடுத்து கொண்டு இருந்தார்... உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லயாய... #பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு... அவர் பெயர் தெரியாத காரணத்தால் நோ லிங்க....

24.இந்த முறையும் நான் அடிச்சு சொல்லுவேன்... அந்த பதிவர் சந்திப்புலேயே இந்த முறையும் நான் தாங்க ரியல் யூத்... எல்லாருமே என்னை விட வயது மூத்த யூத் பதிவர்ஸ்... #டேய் நீ வாங்கற அஞ்சு பத்து பிச்சைக்கு இதலாம் தேவையா அப்படினு கேக்காதீங்க பாஸ்..

25.ஒரு வழியா பதிவர் சந்திப்பு இனிதாய் நிறைவேறியது... நான் எதிர் பார்த்த ஜாக்கி, லக்கிலுக், சுரேகா வராதது ஏமாற்றமே... அடுத்த சந்திப்பில் கண்டிப்பா வரனும்..

26. ஹலோ தலைவரே எங்க போறீஙக்... இன்னும் முடியல.. நான் இன்னும் முடிக்கல....
------------------------------------------------------------------------------------------------------------

கலக்கல் பேச்சுகள்:

சந்திப்பு கூட்டம் முடிந்தவுடன் நடந்த உரையாடல்... உண்மைகள் வெளி வர போகிறது...

1. நா நேரா போய் யோகநாதன் சார்கிட்ட 'எங்க வீட்டுல என்ன மரம் நடலாம்னு கேட்டு தெரிங்சு கிட்டேன்..

2.கடைக்கு புத்த்கம் வாங்க வந்த பலர் சந்திப்பு முடியர வரைக்கும் இருந்து விழாவை சிறப்பித்தனர்..

3.நம்ம வடசென்னையின் இளைய ஆதினம் பிலாசபி பிரபாக்கு, அவருடைய வாசகர் (நோட் திஸ் பாயிண்ட் வாசகாரே) ஒரு அன்பு பரிசு தந்தார்... அதுவும் கனடாவில் இருந்து வந்த பரிசு... கனடானில் உள்ள வாசகர் தன்னால் சென்னைக்கு வர முடியாது என்பதால், தன்னுடைய நண்பரின் மூலம் அந்த பரிசை தந்து அனுப்பினார்...

4.அந்த பரிசு என்னவென்றால், 1200ரூபாய் பணம் கொண்ட ஒரு மூவி கார்டு... வர ஞாயிறு அன்று அந்த கார்டில் சத்யம் தியேட்டரில் படம் பாக்க போறாங்க, எல்லா சென்னை ஆதினங்களும்.... #என்சாய்..

5.போதாத குறைக்கு கேபிள்ஜீயின் ரசிகர் ஒருவர் பாலகணேஷ்... கடலூரில் இருந்து அவரை சந்திக்க வந்து இருந்தார்.. அவர் போகும் வரை கேபிள்ஜி கூடவே இருந்தார் என்பது கூடுதல் தகவல்... நல்லா போட்டாங்கய சாம்பிராணிய..... பாலகணேஷ் அவர்கள் ஒரு புதிய பதிவர் என்பது சிறப்பு, அது எனக்கு ஆப்பு...

6.பிற பதிவர்கள் எல்லாரும் கிளம்ப, கேபிள்ஜீயின் அல்லக்கைகள் அல்லாத உண்மை ரசிகர்கள் மட்டுமே இருந்தனர்... கோபம் வரவங்க தனியா கூப்புட்டு திட்டுங்க சார்....  எல்லாரும் கூம்பளா சேந்துக்கிட்டு பல கேள்வி கனைக்களை கேபிள்ஜி அவர்கள் மீது தொடுத்தோம்.. அவர் அமெரிக்காவிலுள்ள அரசியல்வாதிகள் போல எல்லாத்துக்கும் சிரிச்சே மலுப்பிட்டார்.... அதுல முக்கிய கேள்வி "நீங்க ஏன் நடிகர் விஜய் படங்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள்"... தலைவர் கடைசி வரைக்கும் பதில் சொல்லவே இல்ல பாஸ்..

7. இந்த இடத்துல நான் கேபிள்ஜி அவரிடம் மன்னிப்பு(பூ) கேக்க வேண்டும். #காரணம், எனக்கு மைக்'ல பேச வாய்ப்பு கொடுத்த அப்போ நான் அதிக பிரசங்கி தனமா ஒரு வார்த்தை விட்டுட்டேன்... அது அவருக்கு ஞாபகம் இருக்கானு தெரிய்லை... இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள்... சாரி சார்...

8.பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்... நேரில் பார்த்து பல கேள்விகள் கேக்க முடிகிறது.. அதற்கான பதிலும் அங்கயே கிடைக்கிறது... கேபிள்ஜி பேசியதில் இருந்து என் பிளாக்கை அவர் படிப்பதை தெரிந்து கொண்டேன்...

9.வீடு சுரேஷ் எனக்கு பிளாக் டிசைன்க்கு உதவி செய்வதாக தெரிவித்தார்... ஆரூர் மூனா அவர்கள் நல்ல படியாக பேசினார்.. அவரின் தம்பி என்னுடைய மொபைல் நம்பரை வாங்கி சென்றார்..

10. Tally in Tamil என்னும் பெயரில் பதிவு எழுதும் நண்பர் அவர்கள் தன்னுடய விசிட்டிங் கார்டை தந்து சென்றார்...

11.மேலும் நண்பர் கோகுல் அவர்கள் தன்னுடைய கல்யாண பத்திரிக்கையை அனைவருக்கும் தந்து அனைவரையும் கல்யாணத்துக்கு வருமாறு அழைத்தார்.. அவருடைய திருமண வரவேற்பு பாண்டிச்சேரியில் நடக்கபோகுதுனு தெரிஞ்சதும் எல்லாரும் ஒரு சேர தலை அசைத்து சொன்னார்கள்... ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்..... அனேகமாக அடுத்து 'பாண்டிச்சேரியில் பதிவர் சந்திப்பு நடந்துடும்னு நினைக்கறேன்...

12இன்னும் நிறைய இருக்கு சொல்லுவதற்க்கும் எழுதுவதற்க்கும், ஆனால் இத்துடன் முடித்து கொள்கிறேன்..

எல்லோருக்கும் என் நன்றிகள்..யாரையவது கூற மறந்து இருந்தால் மன்னிக்கவும்.... எனக்கு அவ்ளோ தன் ஞாபகம் இருக்கு....

பொது அறிவிப்பு: எங்கேனும் பேச்சில் பிழை இருப்பின் மன்னிக்கவும்...

நண்பர்கள் என்னுடய பிளாக்குக்கு லிங்க் கொடுக்கவும்...

பல தளங்களில் ஓட்டு போடவும்...

பல நண்பர்களை அழைக்கவும்ம்ம்....

""" என்னையா பெரிய பிளாக்கர்ஸ், 1000 பேர் எழுதுறான், அத 1001பேர் படிக்கிறான், அந்த 1001 நான் தான்"""" புதுகை அப்துல்லா மைக்கில் சொன்னது....


என்றும் யூத்'துடன்
சதீஷ் மாஸ்.......


16 comments:

Unknown said...

விரிவான, விள்க்கமான பதிவு!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

யோவ் தம்பி நீதான்யா பிரபலம்:))))

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பர்,,,,,, சூப்பர்,,,,,


கலக்கல் போஸ்ட்.......

ஓகே.....ஓகே.....

சதீஷ் மாஸ் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
யோவ் தம்பி நீதான்யா பிரபலம்:)))) //

இது தான் சார் உங்க தன்னடக்கம்... நன்றி..

சதீஷ் மாஸ் said...

புலவர் இராமாநுசம் அவர்களுக்கு நன்றிகள்...

சதீஷ் மாஸ் said...

அன்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகள்...

Anonymous said...

மிக நல்ல பதிவு. சூப்பர் சதீஷ்

shortfilmindia.com said...

இதுக்கு முன்னாடி ஞாபகமில்லை.. இப்ப சொன்னதும் ஞாபகம் வந்திருச்சு.. :))

shortfilmindia.com said...

கேபிள் சங்கர்

சதீஷ் மாஸ் said...

// ஆரூர் மூனா செந்தில் said...
மிக நல்ல பதிவு. சூப்பர் சதீஷ் //

நன்றி ஐயா.....

சதீஷ் மாஸ் said...

// shortfilmindia.com said...
இதுக்கு முன்னாடி ஞாபகமில்லை.. இப்ப சொன்னதும் ஞாபகம் வந்திருச்சு.. :))

கேபிள் சங்கர் //

பார்வையிட்டமைக்கும் கமெண்ட் போட்டமைக்கும் நன்றிகள்... ஆனா, என்னனு தான் புரியல...

புதுகை.அப்துல்லா said...

பொதுவா எந்த பதிவர் சந்திப்பு வந்தாலும் கடைசியாத்தான் கிளம்புவேன். அன்று வண்ணாரப்பேட்டையில் கட்சிக்கூட்டம் இருந்ததால சீக்கிரம் கிளம்பிட்டேன். யார்கிட்டயும் அதிகம் பேச முடியலை :(

சதீஷ் மாஸ் said...

புதுகை அப்துல்லா அவர்களுக்கு... பரவயில்லை இருக்கட்டும்....

Balaganesan said...

sathish //பாலகணேஷ் அவர்கள் ஒரு புதிய பதிவர் என்பது சிறப்பு, அது எனக்கு ஆப்பு...// tis line too much ...wat wrong i did thalaiva...........as i liked all those people in the meet & admired abt u...am asked doubts abt ads in blog .. to u knw...did u forget it....

Unknown said...

very nice sathesh,, i am also want to write like u but i dont know how,

சதீஷ் மாஸ் said...

thank u ahamed...