என் தோழர்கள்

Showing posts with label சென்னை யூத் சங்கம். Show all posts
Showing posts with label சென்னை யூத் சங்கம். Show all posts

Thursday, 17 May 2012

சதீஷ் காபிஷாப் - 18/05/2012



வணக்கம் அன்பர்களே...

சென்ற காபிஷாப் பதிவிற்கு அமோக வரவேற்பு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட 505 பேர் வந்து சென்றனர். சின்னதாய் ஒரு நன்றி தான் பாஸ்... இந்த மாதிரி பதிவுக்குனு சில வரைமுறை இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க, நாமும் அதியே ஃபலோ பண்ணுவும். (இது போன்ற பதிவுகளுக்கு என்று சில வரைமுறைகள் உள்ளதாய் அனைவரும் சொல்கிறார்கள், ஆகையால் நாமும் அதை பின்பற்றி செயல்படலாம்)..
------------------------------------------------------------------------------------------------------------
பதிவர் சந்திப்பு:

பதிவர் சந்திப்பு பற்றி எதாவது நானும் சொல்லியே ஆகனும்ல.. அப்ப தான ஒரு கேத்து இருக்கும். வழக்கம் போல தடபுடலா ஆரவரமா பிரச்சாரம் பண்ணி பதிவர் சந்திப்புக்கான நேரம் அறிவிச்சாங்க.. அது வழக்கம் போல இல்லாம இந்த முறை சொதப்பிடுச்சி. மே20 பதிவர் சந்திப்புக்கான தேதி. அதே தேதியில் சென்னை மெரினாவில் நினைவேந்தல் நடக்கிறது. செய்வது அறியாமல் தவிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் நிலைமை தான் கவலைக்கிடம்.
------------------------------------------------------------------------------------------------------------
கொங்கு பதிவர் சங்க துவக்க விழா:

இது ஒரு பக்கம் இருக்க, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா கூகிள் பிளசில் ஒரு செய்தி பரவல்... கோவை மாநகர பதிவர்களே வாருங்கள் நாம் ஒன்று கூடுவோம் என அழைப்பு விடுத்து உள்ளார் சஞ்சய் காந்தி.. அப்ப, கூடிய விரைவில் அவர்களுடய சந்திப்பு நடந்து விடும்.. அதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் பதிவர்களை மட்டும் அழைக்கவில்லை. முகநூல் அன்பர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அறிய.. அவர்களுடைய இந்த முதல் முயற்சி வெற்றி அடைய சென்னை பதிவர்களின் சார்பாக மனமார நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்... எல்லாருக்கும் ஒரு கன்டிஷன், அங்க அங்க நடக்குற பதிவர் சந்திப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா எல்லாரும் ஒன்னா சேந்துடனும்.. சென்னை பதிவர், கோவை பதிவர், ஈரோடு பதிவர்னு யாராச்சும் பிரிச்சி பாத்திங்க, சுட்டுப்புடுவன்.. ஆயிரம் கைகளை இணைக்கும் சக்தி தமிழனின் எழுத்தில் உள்ளது. சொன்னவர் பிரபல பதிவர் சதீஷ் மாஸ்..
------------------------------------------------------------------------------------------------------------
சென்ற சென்னை பதிவர் சந்திப்பு:

போன வருடம் நடந்த பதிவர் சந்திப்பு தான் என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு. ரொம்ப ஜாலியா இருந்துச்சு . யூத் பதிவர் சந்திப்புனு சொல்லி என்னை அழைத்தது மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்கள் தான். அந்த சந்திப்புக்கு பிறகு தான் என் எழுத்தில் ஒரு சூடுபிடித்தது.. அந்த மொத்த பதிவர் சந்திப்பையும் கவர் ஸ்டோரியாக எழுதிய ஒரே பதிவர் சதீஷ்குமார் மட்டுமே. அதை படிக்க.. பல சூவரிஸ்யமான சம்பவங்கள் நடந்துச்சு சோ டோன்ட் மிஸ் இட்..
ஜாக்கி அவர்களின் தளத்தில் மேலும் வாசிக்க...

பதிவர் சந்திப்புக்கான வேலைகளை எல்லாருக்கும் பிரிச்சி கொடுத்து இருக்காங்க. ஆனா இந்த முறையும் கவர் ஸ்டோரி நான் தான் எழுதுவேன் என்று என் வேலையை நானே எடுத்து கொள்கிறேன்... இதுக்கு பேர்தான் வில்லத்தனம்...
------------------------------------------------------------------------------------------------------------
உங்க கமெண்ட்:

இப்ப தான் கொஞ்சம் தைரியம் வந்து கமெண்ட் மாடுரேஷனை நீக்கி உள்ளேன். பார்ப்போம் என்ன நடக்குதுனு... ஹி ஹி.. உண்மைய சொல்லனும்னா கொஞ்சம் இல்லை நிறையாவே பயமா தான் இருக்கு.. இருந்தாலும் என் பல ஆசான்களின் பின் தொடர்களாக நானும் செயல்படுவேன்.. ஆவரது ஆகாட்டும்...
------------------------------------------------------------------------------------------------------------
போட்டோ... என்ன கொடுமை சார் இது.. :

எங்க கணக்கு வாத்தியாரின் கணக்கு. சத்தியமா ஒன்னும் புரியலை
இதுல இருக்கற கணக்கை solve பண்ணி நிறைய பேருக்கு விடை கொண்டு வர தெரியாது என்பதே எமக்கு தெரிந்த விடை... அவ்வ்வ்வ்வ்வ்....
------------------------------------------------------------------------------------------------------------
தத்துவம்:

போடா போய் வே(வ)லைய பாரு இல்லனா எவனாச்சு ஆட்டய போட்டுறுவான்..

பொன்னுக்கும் பொண்ணுக்கும் தான் சண்டை அதுல உருளுது ஆம்பளைங்க மண்டை..

ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து, அனைவரையும் நம்புவது பேராபத்து..

------------------------------------------------------------------------------------------------------------
விளம்பரம்:

பிற பதிவரின் பெருமையை எடுத்து சொல்லி அவர்களுக்கு விளம்பரம் செய்வதே இப்பகுதி.. 
இன்று அன்பைத் தேடி.. அன்பு.. தமிழகத்துல இருந்து சிங்கப்பூர் சென்று செட்டில் ஆன நம்மூர் காரர் ஆன அன்பு.. கணிப்பொறி சம்பந்தப்பட்ட தகவல்களை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறார். அதான் எல்லாரும் எழுதுறாங்களே அப்புறம் என்ன? அப்படிஎன்று நீர் முழங்குவது எம் காதுகளில் பளார் என கேட்கிறது.. இவர் தனது பதிவை மிக தெளிவாக விவரமாக எழுதுகிறார். நடுநடுவே விளம்பர பேனர்கள் வந்து தொந்தரவு செய்யாத ஒரு வலைப்பூ.. இவருடைய வலைப்பூவில் உலகில் உள்ள எல்லா தமிழ் வானொலிகளுக்குமான லிங்க் கொட்டி கிடக்கிறது.. தமிழ் செய்தித்தாள்களும், தமிழ் தொலைக்காட்சிகளும் காணக்கிடக்கிறது. பல நூறு இலவச சாப்ட்வேர்கள் அண்வகுக்கின்றன.. இப்ப கொஞ்ச நாளைக்கு முன் அவர் எழுதிய பதிவு இசைக்கருவிகள் பற்றியது. மிக அருமையான தொகுப்பு அது..

சார் விளம்பரத்துக்கான பணத்தை என்னோட ஸ்விஸ் அக்கோன்ட்டுல போட்டுறுங்க..
------------------------------------------------------------------------------------------------------------
உண்மை:

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு உண்மைய தெரிஞ்சிக்கிட்டேன். நாம புதுசா யாரவது ஒருவரின் தளத்திற்கு சென்று ஒர்ரே ஒரு கமெண்ட் போட்டால் போதும் அடுத்த நிமிடம் அந்த தளத்தின் உரிமையாளர் நம்ம வலைப்பூவிற்கு வந்து ஒரு நோட்டம் விடுகிறார் என்று... அவ்வ்வ்... (இது இப்ப தான் உனக்கு தெரியுமா உனக்கு)... ஆமாங்க பாஸ்... இதுக்கு தான் கமெண்ட் போடனும்.. புரியுதோ நோக்கு..
------------------------------------------------------------------------------------------------------------
பல்லை காட்டாதீர்:
பாவம் அந்த பிகரு......


------------------------------------------------------------------------------------------------------------
கவிதை நேரம்:

நான்
நீ
நாம்
அவன்
அவள்
எல்லாம் நம்ம
சொந்தம்
வாழ்க வளமுடன்..

என் ஆசான் கவிஞர், புலவர், எழுத்து புயல், கவிச்சக்கரவர்த்தி மிஷ்கின் அவர்களுக்கு சம்ர்ப்பணம்..
------------------------------------------------------------------------------------------------------------

போதும் நிறுத்திக்களாம்டா சதீஷ்.. பாரு இப்பவே பாதி பேர் முறைக்க ஆரம்பிச்சுட்டாங்க.. கமெண்ட் போடுவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் அதுவும் என் ஸ்விஸ் அக்கோண்டில் இருந்து தரப்படும்..



என்றும் காபிவுடன்
சதீஷ் மாஸ்........



Monday, 5 September 2011

சென்னை பதிவர் சந்திப்பு - 04/09/2011

ஆரம்பத்துல இருந்து வரேன்.. சென்னையில ஒரு பதிவர் சந்திப்பு நடத்தனும் அப்படினு பிரபல பதிவரான கே.ஆர்.பி.செந்தில், சிவகுமார், பிரபா மற்றும் பலர் முடிவு பண்ணி அத வெற்றிகரமா செய்தும் முடிச்சுடாங்க.....


செப்டம்பர் 4,2011 அன்று கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸின் மேல்தளத்தில் நடைப்பெருகிறது, புதிய மற்றும் அறிமுகமில்லாத பல பதிவர்களை அறிமுகபடுத்தும் விழா தான் அது... என்னையும் தனிப்பட்ட முறையில் சிவகுமார் சார் அழைத்து இருந்தார்... சாரி சாரி அவரை சார் என் அழைக்க கூடாதுனு அவர் அன்பு கட்டளை போட்டு இருக்கார்.. அதனால சிவகுமார் அண்ணே என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து இருந்தார்... அப்பாடா இன்ரோடக்‌ஷன் முடிஞ்சுபோச்சு....


இனிமே என் பார்வையில் இருந்து பதிவர் சந்திப்பு நடைபெற்ற விதத்தை எழுதுகிறேன்......


1. மங்காத்தா படம் பாத்துட்டு நேராக பதிவர் சந்திப்புக்கு போனேன்.. கே.கே.நகர் போனதும் அங்க இருந்து பாண்டிச்சேரி (புதுச்சேரி) கெஸ்ட் அவுஸ்க்கு ஒரு இளநீர் கடைகாரர் வழிசொன்னார்...

2. அங்க போனதும், பதிவர் சந்திப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேசும்படி ஒரு தொலைபேசி இருந்தது.. அந்த எண்ணை தொடர்புக் கொண்டு மீதி முகவரியை வாங்கி கொண்டு, அந்த இடத்தை அடைந்தேன்...

3. என்னை கீழே இறங்கி வந்து அழைத்து சென்றார் சிவகுமார் அண்ணே, பிறகு தான் தெரிந்தது அது அவருடய தொலைபேசி எண் தான் என்பது.. இன்முகத்துடன் வரவேற்றார்.. 


சிவகுமார் : உங்க பேரு?
நான் : சதீஷ் சார்..
சிவகுமார் : அட நீங்க சதீஷ்மாஸ் ஆ?!?!
நான் : ஆமா சார், நீங்க?
சிவகுமார் : மெட்ராஸ் பவன் சிவகுமார்.. உங்களுடைய தெருகூத்து கலைஞர்கள் பற்றிய போஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு.. கீப்ட் அப்...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்..

4. என்னை உள்ளே அழைத்து சென்று, ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அறிமுகம் செய்து வைத்தார்... அவர்கள் அனைவரும் என்னை வாழ்த்தினர்.. பிரபா, கவிதைவீதி சௌந்தர், சென்னை பித்தன், மாறன் மற்றும் பலரிடம்...  நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்...


5. எனக்குனு ஒரு சீட் போட்டு நா உக்காந்துடேன்... அப்போது இன்னும் இரு பதிவர் தங்களை அறிமுக படுத்தி என்னை பற்றியும் கேட்டார்கள்.. அதில் மணிவண்ணன் அவர்களும், பதிவர் தென்றல் உரிமையாளரும் ஒருவர்...


6. பதிவர் தென்றல் என்பது ஒரு பத்திரிக்கை.. பதிவர்கள் எழுதும் சில கட்டுரைகளை அவர்களின் அனுமதியோடு பிரசுரம் செய்யப்படுகிறது... அந்த பத்திரிக்கையின் ஒரு காப்பி எனக்கும் தந்தார்...


7.அமைதியாய் அமர்ந்து இருந்தேன்.. அப்போது கே.ஆர்.பி.செந்தில் அவர்களை அழைத்து வந்து என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் சிவகுமார்..


கே.ஆர்.பி : வணக்கம், சதீஷ் ஆ?
நான் : ம்ம்ம் ஆமா சார்..
கே.ஆர்.பி : ஜாக்கியோடு ரசிகர் தான?
நான் : (எனக்கு ஆச்சரியம்) சார் உங்களுக்கு எப்படி தெரியும்?
கே.ஆர்.பி : உங்க பிளாக் படிச்சு இருக்கேன்.. நல்லா எழுதறீங்க...
நான் : ரொம்ப தாங்க்ஸ் சார்...
கே.ஆர்.பி : உங்க தலைவரும் இங்க வராரு...
நான் : (மனதிற்குள் பயங்கர சந்தோஷத்தில்) ஒகே ஒகே சார்..


பிரபா : ஜாக்கி சார் அவருக்கு உன் பக்கதுல ஒரு சீட்டு போட்டு வை..
நான் : கண்டிப்பா....


8. சிவகுமார் அவர்கள் தாங்கள் கொன்டுவந்த பிளக்ஸ் பேனரை ஒட்டினார்.. அதில் "வா நண்பா" , "சென்னை பதிவர் சங்கம்" என அழகாய் எழுதப்பட்டு இருந்தது.. மேலும் மற்றொரு பேனரில் கவுண்டமணி படம் போட்டு அழகாய் வரவேற்று இருந்தார்...


9. சென்னையை சேர்ந்த பதிவரான கேபிள்சங்கர் வந்தார்.. அதன்பிறகு பல கலகலப்பான விஷயம்லம் நடந்தது... அனைவரும் அவரை சூழ்ந்து நிற்க அந்த இடமே சிரிப்பின் பிறப்பிடமாய் மாறியது... கேபிள்சங்கர் எகிறி எகிறி குதித்து "நானும் யூத் நானும் யூத்" கூப்பாடு போட்டார்...


10. பல பிரபலமான பதிவர்கள் வருகை புரிந்தனர்... யுவகிருஷ்ணா, நரேன், சுரேகா மற்றும் பலர்... (அட என்னடா, யார் யார் வந்தங்கனு முழுசா சொல்லேன்...  -  நா முதல்முறையாக அங்கு சென்றால் எனக்கு அவர்களின் பெயர் மனதில் பதியவில்லை)


11.பின்பு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, ஒவ்வொருவராய் எழுந்த சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.. பெரும்பாலும் அவர்களுடைய அறிமுகத்தை யாரும் கவனிக்கவில்லை.... ஆனால், ஒவ்வொருவரையும் நம்ம கேபிள்ஜீ நக்கல் விட்டு கமெண்ட் அடிச்சது சூப்பர் அப்பு (நோ ஆப்பு)...


12.ஒரு பத்து பேர் பேசி முடிச்சசிருப்பாங்க.. அப்ப திடீர்னு ஒரு பரபரப்பு, ஆரவரம், கலவரம், Hero Entering... Ya u r right... My thala JackieSekar coming... அவர் பின்னால ஒரு கூட்டம்... (தலைவர்னா அப்படி தாங்க இருப்பாங்க).... நா எதோ அவரையே பாத்தேன்... எனக்கு பின்னால இருக்கற சீட்டுல இருந்து ஒரு நாலு சீட்டு தள்ளி உக்காந்து இருந்தார்... சில பேர் எழுந்து போய் அவர்கிட்ட அறிமுகம் பண்ணிகிட்டாங்க... எனக்கு போக பிடிக்கல...


13.என்னை அறிமுகம் படுத்திக்கொள்ள அழைத்தார்கள்.. நான் முன்னே சென்று பேசினேன்... பத்து பேர் முன்னாடி பேசினா எனக்கு கை,கால்லம் உதரும்... ஆனா அங்க எப்படி பஅவ்ளோ தைரியமா பேசினேன் எனக்கு தெரியல... என்னை பொறுத்த வரை நான் நன்றாகவே பேசினேன்...  கொஞ்சம் அதிக நேரம் எடுத்து கொண்டேன்.. அனைவரின் மனதிலும் அழகாய் பதிந்தேன்.. அங்கு என் எழுத்தை ரசிக்காதவர்கள் கூட என் பேச்சை ரசித்தனர்...


14. இப்ப சீரியஸ் ஆன விஷயத்துக்கு வரலாம்... பல முன்னணி பதிவர்கள் தங்களுடைய கருத்துகளை முன் வைத்து பேசினார்கள்... பல விவதங்கள் முன் வைக்கப்பட்டன... யுவகிருஷ்னா அவர்கள் பல நல்ல தகவல்களை புதிய பதிவர்களுக்கு (அத கொஞ்சம் சொல்லவும் - முடியாது, சந்திப்புக்கு வாரதவங்களுக்கு அதான் தண்டனை)... கூகுள் பஸ் வந்ததில் இருந்து பதிவர்கள் குறைந்து விட்டதாக தெரிவித்தார்.. நல்ல விவாதங்கள் தற்போது இல்லை எனவும் சொன்னார்... உங்கள் கருத்துக்களை தைரியமாக வெளியிடவும் என அறிவுருத்தினார்...


15.அவரை தொடர்ந்து "உருப்படாத" நரேன் (நா சொல்லல அவரே தான் சொன்னாரு) பேசினார்.... பற்பல விவாதங்களை முன் வைத்தார்... ராஜீவ், ஈழ தமிழர், அன்னா ஹசாரே.. போன்ற பல முக்கிய விவாதம் நடைப்பெற்றது...


16. சிவகுமார் அவர்கள் பேச ஆரம்பித்தார்.. அதை ஒரே வரியில் சொல்ல முடியாது, ஈழ தமிழர்களை பற்றி கவலைப்படுகிறோமே தவிர நம் தமிழர்களை யாரும் கண்டுக்கொள்வது இல்லை.. டாஸ்மாக் கடையில் பள்ளி சிறுவர்கள் நிற்பது மனதிற்கு வெக்கபட வேண்டிய விஷயம்.. இதை அரசாங்கம் எப்போது தான் கண்டுக்கொள்ளும் என நம் அரசாங்கத்தை பற்றி தெரியாமல் பேசிட்டார் சைவகுமார் (சைவகுமார்)...நாம அவர மன்னிச்சடலாம்...


17.அப்புறம் சுரேகா, தாங்கள் ஆரம்பித்த "கேட்டால் கிடைக்கும்"  பற்றி சூடாக பேசினார்... ஆட்டோ மீட்டர் பற்றியும் தன் கருத்தை முன் வைத்தார்... வெகுஜன மக்களின் நிலை குறித்து கடிந்து கொண்டார்...

18.கணிப்பொறியில் தமிழை உபயோகிக்க முடியும் எனவும் அதை அனைவருக்கும் அறிமுகம் படுத்தவும் அனைவரும் முடிவு எடுத்தனர்... அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்..


19. பின் கூட்டம் தொடர்ந்து நடக்க, சிவகுமார் அண்ணன் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்... பதிவர் சந்திப்புக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் நல்ல புத்தகங்களை கொண்டு வந்து புதிய பதிவருக்கு பரிசளிக்கும் படி சொல்லி இருந்தார்கள்.. அதை சரிவர செய்தது சிவகுமார் அண்ணன் ம்ட்டும் தான்.. "ஹென்றி ஃபோர்ட், எழுதியவர் இலந்தை சு.இராமசாமி " அந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.. அதில் அவரின் கையெழுத்தும் அழகாய் போட்டு தந்தார்... அண்ணன் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்...


20. கூட்டம் முடிந்து ஒவ்வோருவரய் கலைந்தனர்.... பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த சந்தோஷம் சிவகுமார் முகத்திலும் பிலாசஃபி பிரபா முகத்திலும்.. என்னை இந்த சந்திப்பிற்கு அழைத்து அறிமுகபடுத்தி வைத்த இவர்கள் இருவருக்கும் நன்றிகள் பல....








மீண்டும் சந்திப்போம்.........






சதீஷ்.............


Sunday, 28 August 2011

வறுவல் மற்றும் நொறுவல் - 28/08/2011

ஃபேஸ்புக் கலட்டா:
காலை எழுந்தவுடனே பல்ல கூட தேய்க்காம ஃபேஸ்புக்ல ஸ்டேட்ஸ் போடரத வழக்கமா வச்சி இருக்க என்ன மாறி சோம்பேறி கூட தான் இன்னைக்கு சண்டை.. மங்காத்த படம் வேலாயுதம் படம் ரெண்டுத்துக்கும் நடந்த சண்டை தான்.. இது அஜித்துக்கும் விஜய்க்கும் தெரியுமானு கூட யோசிக்கல.. வேலாயுதம் டிரெய்லர் ரிலீஸ் ஆயிடுச்சு அதானலாயே மங்காத்தா படம் ஓடாதுனு நண்பர் சொன்னதுதான் அதுக்குள்ள எதன பேரு சண்டைக்கு வந்துடானுங்க... எங்க தல பெருச உங்க தளபதி பெருசனு அவங்க அப்பா வரைக்கும் போயாச்சு... இதுல ஹைலேட் என்னனா எங்க தளபதி விஜய் டெல்லி போய் அன்னா'வை சந்தித்ததுக்கு அப்புறம் தான் பார்லிமெண்ட் கூட லோக்பாலை ஏத்துக்கிச்சுனு சொன்னது... அப்படியே என் ஈரக்கொலயே அடிப்போச்சு..... 
              -------------------------------------------------------------------------------


திருவான்மியூர் பயணம்:
நண்பன் பாண்டிச்சேரி சொல்வதால் அவனை வழி அனுப்ப சென்றேன்.. இரண்டு பேர் மட்டுமே என்பதால் டூவிலரில் பயணித்தோம்... எஸ் ஆர் பி டூல்ஸ் தாண்டியதும் நாங்கள் பலவற்றை ரசிக்க ஆரம்பித்தோம்.. அதங்க நம்ம ஐடி கேர்ள்ஸ், என் வீடு தாம்பரம் பக்கத்துல அதனால அங்கே பயணிப்பது அபூர்வம் தான்... என்ன அழகு, என்ன கலரு, என்ன ஃபிகரு...மாடர்ன் கல்சர், வேஸ்டர்ன் டிரஸ்.... அ அ அ அ வ் வ் வ் வ் வ்............
நண்பனை வழி அனுப்ப நான் உடன் சென்று இருந்தேன்.. ஆனால் பல பெண்கள் தனியாக பேருந்தில் பயணித்தது ஆச்சரியமாக இருந்தது... நான் தான் இன்னும் 1800லயே இருக்கேன் ஆனா மத்தவங்களாம் முன்னேறிடாங்க... இது 2011 சார்...
       -------------------------------------------------------------------------------

அழைப்பு:
சென்ற பதிவில் தெரிவித்தை போன்றே எனக்கான அங்கிகாரம் இந்த பதிவுலகில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது... தமிழ் மணம் என் பிளாக்கை ஏற்றுக்கொண்டது, எனக்கான ரேங்க் 1582ல் தற்போது உள்ளது... நான் பதிவு செய்யும் போது 1600 என்று இருந்தது...
வருகிற செப்டம்பர் 4 ஙாயிறு அன்று சென்னையில் சென்னை யூத் பதிவர் சங்கம் கூட்டம் நடைப்பெறுகிறது என எனக்கு அழைப்பு வந்து இருந்தது.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.. இது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்... அங்கு சென்றால் பல நண்பர்கள் வட்டம் அமையும் என நினைக்கிறேன் பல பெரிய பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்... நிச்சயம் கலந்து கொள்ள முனைக்கிறேன்...
உங்களை இந்த அடியேன் அழைக்கிறேன், கூட்டத்தில் கலந்துக்கொள்ள... மேலும் விவரம் அறிய இங்கு கிளிக் செய்யவும்
         -------------------------------------------------------------------------------------
 
திருவிழா:
ஆடி 7ம் வார திருவிழா எங்க ஏரியால இப்ப நடக்குது..கோவில் பெரு முத்துமாரியம்மன் ஆலயம் (டேய் கன்னத்துல போடுடா).... தீமிதி திருவிழா வான வேடிக்கை தெரு கூத்துனு ஒரே அமக்களம்... ஊரே கூடி நிக்குது அந்த திருவிழா பாக்க.... சின்ன வயசுல முத ஆளா போய் நிப்பேன்... இப்ப வயசுக்கு வந்ததுனால பெரிய பையன் ஆனதால போக பிடிக்கல.... எப்படியும் தெரு கூத்து பாக்க போகனும்.... 
           -----------------------------------------------------------------------------------


மிண்டும் சந்திப்போம்.......














சதீஷ்...............