என் தோழர்கள்

Showing posts with label கவிதை நட்பு. Show all posts
Showing posts with label கவிதை நட்பு. Show all posts

Monday, 22 August 2011

இழந்த நட்பின் வரலாறு - 2

பேசிய வார்த்தைகளை மறந்து
     இல்லை மறவாமலோ
நட்பு பாராட்டிய ஒரே-காரணமோ
     அதிலும் இவன் ஒழுங்கினமே
மனமார வாழ்த்த ஒரு மனம்
      வேண்டும் அதை ஏற்க
தகுதியற்ற நிலையில் நான்....
      உன்னை நினைத்து பெருமை
உன் செயலால் நட்பில் செழுமை
     நட்பு கூட கதறி அழும்
நீ அனுப்பிய குறுஞ்செய்தியை கண்டால்
    நான் மட்டும் வதிவலக்கா....?!
நான்குமுறை வாசித்ததும் - உன்
    பெயரா என சோதித்ததும்-தான்
நான் கண்ட புண்ணியம்.......


அழகே உருவான உன்
இடத்தில் என் நட்பின் தேடல்
இனி இருக்காது என தெரிந்து
வாழ்த்தியதற்கு வாழ்த்துமடல்
மட்டும் அனுப்பும் பழைய தோழன்....


நட்பு கூட மறந்துவிடும்
ஆனால், விட்டு பிரிந்து
சென்ற நட்பு மறக்காது....


காலத்தாலும் காற்றாலும் பிறவற்றாலும்
அழியாமல் இருக்க இது பதிவு செய்யப்படுகிறது.


வீரசக்தி கொண்ட யானைகள்
மன்னனை காப்பது போல
இவ்வுலக சக்தி அனைத்தும்
ஒன்று கூடி உன்னை வாழ்த்தி
வாழ வைக்க வேண்டும் என
வேண்டிக்கொள்கிறேன்.......


இந்த பதிவு பற்றி::
என் வகுப்பு தோழி ரேவதிபிரியா அனுப்பிய பிறந்தநாள் குறுஞ்செய்திக்கு நான் அனுப்பிய மடல்....


Many more happy returns f day..:-) Njoy d days..:-) Lt b followng yrs brng happines and success..:-) Onc again HAPPY BIRTHDAY 2 U:-D


அந்த அழகிய குறுஞ்செய்தி இது தான்.....










என்றும் இழந்த நட்பின் நினைவுடன்,
சதீஷ் மாஸ்.........


இழந்த நட்பின் வரலாறு - 1

நட்பே உருவாய் வந்து
    தன் நினைவுப்பரிசை தந்தது
ஏனோ, தம் கடமையை முடித்ததோ
    இல்லை கடனை ஒப்படைத்ததோ....
ஆனால், அந்த அழகியிடம் தான்
     நான் நட்பை கற்க வேண்டும்
எத்தனை பெருந்தன்மை அவளுக்கு....
    சின்னஞ்சிறு குழந்தை பொம்மை
அதிலும் பெண் பொம்மை
     அவளின் நினைவாக இருப்பதற்கோ.....
நட்பை நிலைநாட்டிய பெருமை
     அவள் என்னை வாழ்த்தியதில்
இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி
     உறைய வைத்து விட்டது....
காலத்தால் அழியாத நட்பு
    என கூற இடமில்லை-ஆனால்
நினைவால் அழியாத நட்பு
    என கூற இடமுண்டு.....
அழகாய் இடம் பிடித்தது
    அந்த பொம்மை-எங்கள்
வீட்டிலும் என்னிடத்திலும்.....


காற்றோடு கலந்து சென்று விடும்
நினைவு அல்ல இது - காலத்திற்க்கும்
பேசபட வேண்டும் என்று பதிவு செய்யப்படுகிறது.


அழகாய் இருக்கிறது - நன்றி
    என ஒரே வார்த்தையில் முடித்து 
விட்டு இப்போ ஒருபக்க எழுத்துகளா,
    ஏனோ தெரியவில்லை
பேசவும் சொல்லவும் விருப்பமில்லை
    நான் இழந்த இரண்டாவது
நட்பு ஆயிற்றே இது.......






என்றும் இழந்த நட்பின் நினைவுடன்,
சதீஷ் குமார்...............................






இந்த பதிவு பற்றி::
என் வகுப்பு தோழி ஷ்யாம்லி தந்த பிறந்த நாள் பரிசுக்கு நான் எழுதி தந்த பதில்......


Saturday, 13 August 2011

கவிதை நேரம்

நட்பே,
என் இதயம் துடிப்பது போன்ற உணர்வு
                                            - நீ உடன் இருந்தால்
என் இரத்தம் உறைவது போன்ற உணர்வு
                                             - நீ உடன் இல்லையேல்
நீ இல்லா இவ்வுலகம் உயிரற்ற உடல்களின் "நடமாட்டம்"